December 26, 2007

அணில்


வாகனத்தில் விழுந்து
தற்கொலை செய்தது

ராமனுக்கு எழனி
தந்ததற்காயிருக்குமா?

December 15, 2007

காலத்திலிருந்து காலுக்கு

எஞ்சுருக்குபையிலிருந்து நிறய எடுப்பேன்
தொட்டுப்பாரு
உங்கயி
உங்காலு
எல்லாமும் வெச்சிருக்கேன்
***

எல்லாரும்
ஏந்தலக்குள்ளார உக்காந்து
மண்டைய இடுச்சு
மாவிளக்கு வெக்றாங்க
இப்பதா
செவுத்துல இடிச்சு
செங்கல்லாட்டம் கொட்டுனேன்

******
வயித்துக்குள்ளபோயி
வக்கப்போறாயா சூடு......
கொட்டாவுயுட்டாலே
கொட சாஞ்சுருவே
*********
வீட்டபுடுங்கி
வீதியிலபோட்டவ
கொலைய அறுத்துபுட்டு
கோவிலுக்கு போயி
மொளகா அரச்சு
மாசாணிதலையிளும்

November 06, 2007


மழை தனது கட்டுப்பாட்டில் பெய்துகொண்டு
நனைக்கிறது
சிறகுகளற்ற
வானத்தையும் குளத்தயும்

வயிற்றுக்குள்ளிருந்து கிளம்புகிற
வரலாறு
பாதங்களுக்கு வெளியே
நீள்கிறது

செல்போன் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது

எல்லாவற்றையும்
அதன் கட்டுப்பாட்டில்
கொண்டுவந்து
நீயும் நீயுமற்ற
நிலாக்காலங்களை அசைபோட்டபடி
1
திசைகளை பிழிந்து
எடுக்கப்பட்ட வழிகளில்
நடக்கிறேன்

2
காற்று
தன்னையிழந்து
நிரப்புகீறது
காலியாயிருக்கிற
கலயங்களை
3
எதுவும் புரியாத
நிலைகளில்
வாழ்வை உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்
நண்பர்கள்
கிரிடெட்கார்ட்
உருதிசெய்துகொண்டு
4
சமனற்ற சிக்னல்கள்
நேரத்தை
குடிக்கிறது
தாகமில்லாமல்
5
புகை வழிகிறது
அற்றுப்போன நிமிடங்களில்
6
காலப்பரபரப்பில்
மூழ்கப்போகிறது
விடியல்

October 20, 2007




பைத்தியகாரி ....................


இப்படித்தான் எல்லோரும் சொல்லுவார்கள் சரசம்மாவை

எனது அலுவலகத்திற்க்கு அருகில் வீடுகளில்


பத்துபாத்திரம் தேய்ப்பது முதல் வாசல் தெளிப்பது வரைக்கும்

அவள்தான் செய்வாள்


முடிந்தவுடன் அவர்கள் கொடுப்பதை வாங்கி முந்தானையில்


முடிந்துகொண்டு தனது இருப்பிடத்துக்கு போய்விடுவாள்


அவளது இருப்பிடம் மிக எளிமையானது


யாருக்கும் தொல்லைதராத ஒதுக்குபுறமான ஒரு இளைஞர் மன்றம்


சரசம்மாவிற்க்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு


பசங்கள்ஒதுங்கிவிட்டார்கள்


இப்போது அவள்மட்டும்

தனிக்காட்டுராணி

ஒரு வருடத்திற்க்கு முன்பு ஒரு கிருஸ்துமஸ் நாளில் அலுவகத்தில்

எழுத்துப்பணியில்

நிமித்தமாக அமர்ந்திருந்தேன்


திடீரென கதவு திறக்கும் சத்தம்

சரசம்மாநின்றிருந்தாள்


என்ன சரசம்மா?

ஒரு புன்னகை

சாப்பீட்டீங்களா?

எங்கீங்க சோறு தின்னா கையீ அந்துழுந்துருது

ஓ!

அன்னைக்கு சின்னக்கா ஒரு புட்டு தந்தா

அததின்ன பொறக்கு வயிறு வீங்கி ஒரு கல்ல பெத்துபோட்டேண்

அந்தக்கல்லுலதான் இப்ப ஊரே தொவைக்குது!

நெத்தியில் இருந்த ஒரு ரூபாய் காசை அழுதிவிட்டபடி பேசினாள்

ஏம்மா இன்னைக்கு ஏசுக்காரங்களுக்கு நோம்பி

ஜெபா வீட்டுக்கு போனா எதாவது கெடைக்குமல்ல?

என் டிபனில் ஒன்றுமில்லாததை காட்டாமல் ஆற்றுப்படுத்தினேன்

அய்யோ அங்க போனா நம்மாளுக சோறுபோடமாட்டாங்க

ஏன்?

பாய்ஊட்டுக்கும்போவெங்...........

சிலுவைக்கும்போவெங்...........

அதெல்லாம் இவுனுகளுக்கு புடிக்காதுங்...

அப்புறம் இவுங்க சோரு போட மாட்டாங்க.....




தீடிரென த்தாவினாள்

நான் மகாராணியாதா மேட்டுப்பாளையத்துல இருந்தேன்

வேற நாட்டு ராசா வந்து என்ற பொடக்காழிய புடுச்சுட்டு

தொரத்திஉட்டுட்டான்

அவ அவ கைக்கே மோதுரம் போட வக்கில்ல அவஞ்....... மோதுரம்

வேணுமா?

பக்கத்திலிருந்த எல்லோரும் காணாமல் போனார்கள்

அவள் சோத்தை எப்போதும் ஒரு பொருட்டாக மதித்தவலுமில்லை

பின் எதுக்காக வந்தாள்

திடீர் நினைவு வந்தவளாக

அந்த சூரியன் நேத்திருந்து என்ற அடுப்புக்குள்ள போய் பூனைக்குட்டியாட்டா

படுத்து தூங்குது

அத கொஞ்சம் வந்து தொரத்தி உடறீங்களா

அட!

என்ன மாதிரியான கற்பனை இது

அன்றுமுதல் இருவருக்குமிடையே கவித்துவமான நெருக்கும்

தொடங்கஆரம்பித்தது

அவள் இருக்கும் இடத்திற்க்கு அருகில் தான் எங்கள்நிறுவனத்தின்

பயிற்சிஅறை

எல்லாபகுதியிலிருந்தும் வந்து பயிற்சி பெறுவார்கள்

இப்படி ஒருநாள் நடந்து கொண்டிருந்த போது..........

“ஆர ஏச்சு கூட்டமா அண்டா திருட வந்திருக்கே

என்ற கைய சோத்துக்குள்ள ஒளிச்சு வெச்சுருக்கே
முடிஞ்சா திருடிப்பாரு”

சன்னலை திறந்து பார்த்து சத்தம் போட்டாள்

இயக்குநர் அழைத்தார்


“கொஞ்சம் சத்தம் போடாம இருக்க சொல்லுங்க”

நான் ஏதோ சரசம்மாவின் அலுவலக உதவியாளர் போல் எண்ணி

கோரிக்கை வைத்தார்

கொஞ்ச நாளாகவே சரசம்மா நான் சொன்னால் பொட்டிபாம்பாட்ட அடங்கிவிடுவது பிரசித்தமாகியிருந்தது இதற்க்கு காரணம்

‘சரசம்மா’!

ஏனுங்க?....

மீட்டிங் நடக்குது


செரீங்...,,

அவ்வளவு தான்...,,

பயிற்சி தொடர்ந்தது

காரணம் நான் என்றுமே சரசம்மாவை பைத்தியகாரியாக பார்த்ததில்லை

அவளுக்குள் உறங்கும் இலக்கியத்தை மொழிபெயர்க்கிறவனாக


அவள் மனசை பிரதியெடுக்கிறவனாக

அவளோடு நெருக்கமாகியிருந்தேன்

அவளது sub consious பேசும் மொழி


எனக்கு மிகப்பரிச்சயமாகியிருந்தது

கம்பத்தோடு பேசுவது


மரத்தோடு சண்டை போடுவது

இப்படி நிறைய சம்பவங்களுக்கு பின் உள்ள காரணங்கள்

ஆராய்சிக்குறியவையாக இருக்கும்

சரி விசயத்திற்க்கு வருகிறேன்

புதிதாய் இப்போது ஒரு பெண்

அவளோடு காணப்படுகிறாள்

விசாரித்தேன்

பெயர் கருப்பாத்தாள்

மூளை வளர்ச்சி குறைவு

வயசு 11

ஊர் அதே

அம்மா புற்றுநோயாள் இறந்துவிட்டாள்

அப்பா இன்னும் நோயாளி

கருப்பாத்தளின் உறவினர்கள் ஓரளவு வசதியாகத்தான் இருக்கிறார்கள்

ஆனால்..........

அவர்கள் வீடுகளில் புறக்கணிக்கப்படுகிறாள்

அவர்களாள் கேலிக்குள்ளாக்கப்படுகிறாள்

அவர்களால் துன்புறுத்தப்படுகிறாள்

சரசம்மாளோ .....

அவளை அரவணைத்துக்கொண்டிருகிறாள்
அவளை சீராட்டுகிறாள்

சாப்பாடு

துணிமணிகள்

நொருக்குத்தீனிகள்

எங்கிருந்தாவது கொண்டுவந்து தினமும் கொடுகிறாள்


இதில்

யார் பைத்தியகாரர்!?

புறக்கணித்த உறவினரா?

அடைக்கலமாய் இருக்கும் சரசம்மாவா?

பைத்தியகாரர் என்று முத்திரை குத்தப்படுகிற அத்தனை பேரும்

நடிக்கதெரியாதவர்கள்

வஞ்சனை தெரியாதவர்கள்

இந்த சமூகத்தின் முகமூடிகள் அணியாமல் இருப்பவர்கள்

குறுக்கீடுகளின் அழுத்தம் தாங்காமல்

MAINSTREAM க்குள் இணைய முடியாமல்( MAINSTREAM என்பதே தனித்த


அடையாளங்களை ஒழிக்கிற வேலை


தனித்த அடையாளங்களை காயப்படுத்தி


அதை கேள்விக்குள்ளாக்குகிறபோதுதான் அவர்கள் இரண்டுக்குமிடையேயான


மனோநிலைக்கு தள்ளப்பட்டு நம்மாள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறீர்கள்)

விளிம்புக்குள் தள்ளப்பட்டவர்கள்

அவர்களை நெருங்கிப்பார்க்கும் பொழுது

இன்னும் நிறைய கிடைக்கும்

கற்றுக்கொள்ள

October 13, 2007


The Tea Story:
2737 B.C. • The second emperor of China, Shen Nung, discovers tea when tea leaves blow into his cup of hot water or so the story goes.




350 A.D. • A Chinese dictionary cites tea for the first time as Erh Ya.




400-600 • Demand for tea as a medicinal beverage rises in China and cultivation processes are developed. Many tea drinkers add onion, ginger, spices, or orange to their teas.




400 • Now called Kuang Ya in the Chinese dictionary, tea and its detailed infusion and preparation steps are defined.




479 • Turkish traders bargain for tea on the border of Mongolia.




593 • Buddhism and tea journey from China to Japan. Japanese priests studying in China carried tea seeds and leaves back.




618-907 T'ang Dynasty• Tea becomes a popular drink in China for both its flavor and medicinal qualities.




648-749 • Japanese monk Gyoki plants the first tea bushes in 49 Buddhist temple gardens.• Tea in Japan is rare and expensive, enjoyed mostly by high priests and the aristocracy.




725 • The Chinese give tea give its own character ch’a.




729 • The Japanese emperor serves powdered tea (named hiki-cha from the Chinese character) to Buddhist priests.




780 • First tea tax imposed in China. • Chinese poet-scholar Lu Yu writes the first book of tea titled Ch’a Ching (The Classic of Tea) in timely alignment with the Taoist beliefs. The book covers detailed ancient Chinese tea cultivation and preparation techniques.




805 • Buddhism and tea devotion spreads further. • The Japanese Buddhist saint and priest Saicho and monk Kobo Daishi bring tea seeds and cultivation and manufacturing tips back from China and plant gardens in the Japanese temples.




960-1280 Sung Dynasty• Chinese tea drinking is on the rise, as are elegant teahouses and teacups carefully crafted from porcelain and pottery.• Drinking powdered and frothed tea or tea scented with flowers is widespread in China while earlier flavorings fall by the wayside.• Zen Buddhism catches on in Japan via China and along come tea-drinking temple rituals.




1101-1125 • Chinese Emperor Hui Tsung becomes tea obsessed and writes about the best tea-whisking methods and holds tea-tasting tournaments in the court. While “tea minded,” so the story goes, he doesn’t notice the Mongol take over of his empire.• Teahouses in garden settings pop up around China.




1191 • Japanese Buddhist abbot Eisai, who introduced Zen Buddhism to Japan, brings tea seeds from China and plants them around his Kyoto temple.




1206-1368 Yuan Dynasty• During the Mongol take over of China, tea becomes a commonplace beverage buy never regains its high social status.




1211 • Japanese Buddhist abbot Eisai writes the first Japanese tea book Kitcha-Yojoki (Book of Tea Sanitation).




1280 • Mongolia takes over of China and since the Emperor of Mongol isn’t a “tea guy,” tea drinking dies down in the courts and among the aristocracy. The masses continue to indulge.




1368-1644 Ming Dynasty• At the fall of the Mongol take over, all teas — green, black, and oolong — is easily found in China.• The process of steeping whole tea leaves in cups or teapots becomes popular.




1422-1502 • The Japanese tea ceremony emerges onto the scene. First created by a Zen priest named Murata Shuko, the ceremony is called Cha-no-yu, literally meaning "hot water tea" and celebrates the mundane aspects of everyday life. • Tea’s status elevates to an art form and almost a religion.




1484• Japan's shogun Yoshimasa encourages tea ceremonies, painting, and drama.




1589 • Europeans learn about tea when a Venetian author credits the lengthy lives of Asians to their tea drinking.




1597• Tea is mentioned for the first time in an English translation of Dutch navigator Jan Hugo van Linschooten's travels, in which he refers to tea as chaa.




End of 1500s • Japanese tea master Sen-no Rikyu opens the first independent teahouse and evolves the tea ceremony into its current simple and aesthetic ritual. During this ceremony, one takes a garden path into a portico, enters upon hearing the host’s gong, washes in a special room, and then enters a small tearoom that holds a painting or flower arrangement to gaze upon. The tea master uses special utensils to whisk the intense powdered tea. Tea drinkers enjoy the art or flowers and then smell and slurp from a shared teabowl. • Europeans hear about tea again when Portuguese priests spreading Roman Catholicism through China taste tea and write about its medicinal and taste benefits.




1610 • The Dutch bring back green tea from Japan (although some argue it was from China).• Dutch East India Company market tea as an exotic medicinal drink, but it’s so expensive only the aristocracy can afford the tea and its serving pieces.




1618 • Chinese ambassadors present the Russian Czar Alexis with many chests of tea, which are refused as useless.




1635 • Tea catches on in the Dutch court.• A German physician touts a warning about the dangers of tea drinking.




1637 • Wealthy Dutch merchants’ wives serve tea at parties.




1650-1700 • Tea parties become quite trendy among women across the social classes. Husbands cry family ruin, and religious reformers call for a ban.




1650 • The Dutch introduce several teas and tea traditions to New Amsterdam, which later becomes New York.




1657 • The first tea is sold as a health beverage in London, England at Garway's Coffee House.




1661 • The debate over tea’s health benefits versus detriments heightens when a Dutch doctor praises its curative side while French and German doctors call out its harmful side.




1662 • When Charles II takes a tea-drinking bride (Catherine Braganza of Portugal), tea becomes so chic that alcohol consumption declines.




1664 • English East India Company brings the gift of tea to the British king and queen.• The British take over New Amsterdam, name it New York, and a British tea tradition ensues.




1666 • Holland tea prices drop to $80-$100 per pound.




1669 • English East India Company monopolizes British tea imports after convincing British government to ban Dutch imports of tea.




1670 • The Massachusetts colony is known to drink black tea.




1680s • Tea with milk is mentioned in Madam de Sévigné’s letters.• The Duchess of York introduces tea to Scotland.




1690 • The first tea is sold publicly in Massachusetts.




1697 • The first known Taiwanese cultivation and export of domestic tea takes place.
Late 1600s • Russia and China sign a treaty that brings the tea trade across Mongolia and Siberia.




18th Century • The controversy over tea continues in England and Scotland where opponents claim it’s overpriced, harmful to one’s health, and may even lead to moral decay.




1702-14 • During Queen Anne’s reign, tea drinking thrives in British coffeehouses.




1705 • Annual tea importation to England tops 800,000 pounds.




1706 • Thomas Twining serves up tea at Tom’s Coffee House in London.




1717 • Tom’s Coffee House evolves into the first teashop called the Golden Lyon. Both men and women patronize the shop.




1723• British Prime Minister Robert Walpole reduces British import taxes on tea.




1735 • The Russian Empress extends tea as a regulated trade.• In order to fill Russia’s tea demand, traders and three hundred camels travel 11,000 miles to and from China, which takes sixteen months. • Russian tea-drinking customs emerge, which entail using tea concentrate, adding hot water, topping it with a lemon, and drinking it through a lump of sugar held between the teeth.




1765 • Tea easily ranks as the most popular beverage in the American colonies.




1767• The Townshend Revenue Act passes British Parliament, imposing duty on tea and other goods imported into the British American colonies.• A town meeting is held in Boston to protest the Townshend Revenue Act, which leads to an American boycott of British imports and a smuggling in of Dutch teas.




1770• Parliament rescinds the Townshend Revenue Act, eliminating all import taxes except those on teas.




1773 • In protest of British tea taxes and in what becomes known as the Boston Tea Party, colonists disguised as Native Americans board East India Company ships and unload hundreds of chests of tea into the harbor. • Such “tea parties” are repeated in Philadelphia, New York, Maine, North Carolina, and Maryland through




1774.
1774• A furious British Parliament passes the Coercive Acts in response to the American “tea party” rebellions.• King George III agrees to the Boston Port Bill, which closes the Boston Harbor until the East India Company is reimbursed for its tea.




1775• After several British attempts to end the taxation protests, the American Revolution begins.




1778 • Before the indigenous Assam tea plants is identified, British naturalist Sir Joseph Banks, hired by the East India Company, suggests that India grow plant and cultivate imported Chinese tea. For 50 years, India is unsuccessful.




1784• Parliament further reduces the British import taxes on tea in an effort to end the smuggling that accounts for the majority of the nation's tea imports.




1785 • 11 million pounds of tea are brought into England.1797• English tea drinking hits a rate of 2 pounds per capita annually, a rate that increases by five times over the next 10 years.




1815-1831 • Samples of indigenous Indian tea plants are sent to an East India Company botanist who is slowly convinced that they are bona fide tea plants. 1826• English Quaker John Horniman introduces the first retail tea in sealed, lead-lined packages.




1830• Congress reduces U.S. duties on coffee and tea and other imports.




1833• By an act of the British Prime Minister Charles Grey (the second Earl Grey and the namesake of the famous tea), the East India Company loses its monopoly in the trade with China, mostly in tea.




1835 • The East India Company starts the first tea plantations in Assam, India.




1837• The first American consul at Canton, Major Samuel Shaw, trades cargo for tea and silk, earning investors a great return on their capital and encouraging more Americans to trade with China.




1838 • The first tea from Indian soil and imported Chinese tea plants is sold. A small amount is sent to England and quickly purchased due to its uniqueness.




1840s • American clipper ships speed up tea transports to America and Europe.
1840s and 50s• The first tea plants, imports from China and India, are cultivated on a trial basis in Sri Lanka (Ceylon).




1840• Anna the Duchess of Bedford introduces afternoon tea, which becomes a lasting English ritual.




1849• Parliament ends the Britain's Navigation Acts, and U.S. clipper ships are allowed to transport China tea to British ports.• Tea wholesaler Henry Charles Harrod takes over a London grocery store and grows it into one of the world's largest department stores.




1850• Londoners get their first peak at a U.S. clipper ship when one arrives from Hong Kong full of China tea.• U.S. clipper ships soon desert China trade for the more profitable work of taking gold seekers to California.




1856 • Tea is planted in and about Darjeeling, India.




1859• Local New York merchant George Huntington Hartford and his employer George P. Gilman give the A&P retail chain its start as the Great American Tea Company store. Hartford and Gilman buy whole clipper shipments from the New York harbor and sell the tea 1/3 cheaper than other merchants.




1866• Over 90 percent of Britain's tea is still imported from China.




1869 • The Suez Canal opens, shortening the trip to China and making steamships more economical.• In a marketing effort to capitalize on the transcontinental rail link fervor, the Great American Tea Company is renamed the Great Atlantic and Pacific Tea Company.• A plant fungus ruins the coffee crop in Ceylon and spreads throughout the Orient and Pacific, giving a hefty boost to tea drinking.




1870 • Twinings of England begins to blend tea for uniformity.1872• The Adulteration of Food, Drink, and Drugs Act deems the sale of adulterated drugs or other unlabeled mixtures with foreign additives that increase weight as punishable offenses.




1875• A new British Sale of Food and Drugs Law calls adulteration hazardous to personal health and increases its legal consequences to a heavy fine or imprisonment.




1876• Thomas Johnstone Lipton opens his first shop in Glasgow, using American merchandising methods he learned working in the grocery section of a New York department store.




1890• Thomas Lipton buys tea estates in Ceylon, in order to sell tea at a reasonable price at his growing chain of 300 grocery stores.
Late




1800s • Assam tea plants take over imported Chinese plants in India and its tea market booms. • Ceylon’s successful coffee market turns into a successful tea market.




1904 • Englishman Richard Blechynden creates iced tea during a heat wave at the St Louis World Fair.




1904• Green tea and Formosan (Taiwanese) tea outsells black tea by five times in the U.S.




1908 • New York tea importer Thomas Sullivan inadvertently invents tea bags when he sends tea to clients in small silk bags, and they mistakenly steep the bags whole.




1909• Thomas Lipton begins blending and packaging his tea in New York.




1910 • Sumatra, Indonesia becomes a cultivator and exporter of tea followed by Kenya and parts of Africa.

October 12, 2007

கோவையிலிருப்பவர்களுக்கு கென்னடி தியேட்டர் தெரியாமலிருக்காது
ஆனால் எனக்கு தெரியாமலிருந்ததது ஆச்சரியமல்ல!
அதன் பின்புறத்தில் ஒரு ஆட்டோகேரேஜ்........
GK அதன் பெயர்
.......
அதன் உரிமையாளர்... உரிமையாளரென்றால் எப்பவுமே ஸ்பேனரும் கையுமாய் இருப்பவர் விஜி.....


ஒருமுறை நண்பர் சினிவாசனோடு அவரை சந்திக்க முடிந்தது
மனதுக்குள் எதையும் பூட்டி சாவியை தொலைக்காத கேரக்டர்
தொண்டையில் வடிகட்டியும் கிடையாது
வறுமையால் படிப்பை தொடரமுடியாத நிலையில் அப்பாவோடு தொழிலில் ஐக்கியமாகியிருக்கிறார்
வயது 33
காலில் எப்போதும்
எம்.எப் ஆர் டயர் இருக்கும் பரபரா.......

நீங்க என்ன வேலை செய்ரீங்க ? இது அவர்

ஒரு சமூக மேம்பாட்டு திட்டதில் பணியாற்றுகிறேன்.

அப்படீன்னா?

குழந்தை தொழிலாளர் குறைப்பு திட்டம் பழங்குடிகள் மேம்பாடு

சிரித்தார்

தினறினேன்

இல்லை இது எனக்கு வேலை!
உங்களுக்கு ஆட்டோமொபைல் மாதிரி.....

ஓகோ...*

விலாவாரியாக கேட்டார்

தொலைபேசியில் யாரையோ அழைத்தார்

எந்த கோவிலுக்கோ போகவேண்டிய தானத்தை நிறுத்தி
400 குழந்தைகள் இருக்காங்க
ஒருநாள் நல்லா சாப்பிடட்டும்
............................
தெய்வ குத்தமா?

இப்படி ஒரு தெய்வமிருக்கிறதுதான் குத்தம்........
எதிர்முனையை துண்டித்தார்

முகவரி கேட்டார்
கொடுத்தேன்

அடுத்த நாள்

மிக நல்ல பேக்கில் 400 பிரியாணிகள் வந்திறங்கியது அதிர்சியாயிருந்தது

அன்று

குழந்தைகள் தங்கள் வாழ்நாளில் உண்டிராத

வித்தியாசமான உணவை புசித்தனர்

திடீரென்று ஒருநாள் ஒருவரை அழைத்து வந்தார்
இவனுக்கு இன்று பிறந்த நாள்
இன்னைக்கு குழந்தைகளுக்கான சாப்பாடு இவனதுசெலவு

ஒருநாள் யாரோ ஒரு ஜைனரைப்பிடித்து 200 ஆரஞ்சுப்பழங்களை அனுப்பி வைத்தார்
இப்படி வருடத்திற்க்கு கிட்டதட்ட 25000 ரூபாயை திருப்பிவிட்டு வருகிறார்

8 மதங்களுக்கு முன்அவருடைய பிறந்த நாளுக்கு அழைத்தார்

அங்கே எல்லாருக்கும் முன்னால் அவருடைய ஜாதகத்தை எரித்து
அதிர்ச்சியளித்தார்

ஒரு நாள் கேட்டேன்

கடவுள் நம்பிக்கை இருக்கா?

இருந்தது..இப்ப இல்லை

தி.க வா?

இல்லை !

கம்யூனிஸ்டா?

இல்லை !

பெரியாரை படிச்சிருகீங்களா?

இல்லை!

பின்னே...

சாமிகள் ஒன்றும் செய்யவில்லை

உங்க கிட்ட ஒருத்தர் ஒரு உதவி கேட்கிறார்
செய்யவில்லை
மீண்டும் ஒரு நாள் ஒரு உதவி கேட்கிறார்கள்
செய்யவில்லை
ஒன்றுமே செய்யாத உங்களை ஏன் நம்பனும் அதுமாதிரிதான்

கல்யாணம் எப்போ விஜி?

பொண்ணுகிடைக்க மாட்டீங்குது!

ஏன்?

அம்மா அப்பா பாக்கறதெல்லாம்
சாதிக்குள்ளயே பாக்குறாங்க

அப்புறம்?

எனக்கு அது புடிக்கிலீங்க..
என்ன வெங்காய சாதிங்க?
சும்மா டென்சன் பண்ரானுக.....

இவுனுக எது மோசம்னு சொல்லறாங்களோ
அந்த சாதியில தான் பண்ணணும்

அவர்
விருப்பம் போலவே ஒரு தோழி கிடைத்திருக்கிறாள்
என்று கேள்விப்பட்டேன்

இப்படி ஏராளமான கட்டுகளை
உடைத்துப்போடுகிறார்

சும்மா தத்துவ தவுடுகளுக்கு மத்தியில்
மிக எதார்த்தமாக வாழ்வை எதிர்கொள்ளும்
விஜியை இரண்டு கரமெடுத்து ஏனோ மனசு
தொழுகிறது

அந்த உறவு இன்னும் இறுக்கமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது

September 20, 2007

என்ன எழவு கெரெகம் இது


ராகங்களின் தலையில்

சொட்டிக்கொண்டிருக்கிறது

எச்சங்கள்


கவிதையிலிருந்து

காட்டுக்கும்

சிறகிலிருந்து

வானத்திற்க்கும்


நீயும் புண்ணாக்கும்


அலுவலகத்திலிருந்து

வந்தவுடன்

வாசனை நுகர்ந்து

வாலைக்குழைத்து

கால்களைநக்கி

கவுந்தடித்து


வறுக்கிகிடைத்தவுடன்


காணாமல் போய்விடுகிறது


என் நாய்

September 07, 2007

RED TEA-ரெட் டீ-முருகவேள்


தோழர் முருகவேளோடு ஒரு இரவு முழுக்க கோபநாரியின் காட்டுப்பகுதிகளில் வெளிச்சம் ஒழுகும் இரவில் நிழல்களின் அசைவுகளில் கேளையாடுகளின் சத்தங்களோடு RED TEA யின் உள்ள கவிதைகளை மொழிபெயர்க்க அமர்ந்தபோது நாவலின் பக்கங்களை படிக்கக்கொடுத்தார் கொஞ்சம் பக்கங்களுக்குள் மனதைபிழிந்து போட்டுவிட்டது அதன் இயல்பான சம்பவங்கள்


இப்போது தேயிலை மலைகளை பார்க்கும் போதெல்லாம் லட்சக்கணக்கான மனிதர்களைதின்று வயிறு வீங்கி படுத்திருப்பது போலவே தெரிகிறது
ஆங்கில மொழியில் வெளிவந்து கேட்பாரற்று கிடந்த மிகச்சிறந்த இந்த நாவல்,வெகு விரைவில் முருகவேளின் மொழிபெயர்ப்பில், விடியல் பதிப்பக வெளியீடாக வரவிருக்கிறது. இந்நாவல் புதிய அலைகளை தருவதற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது
இது வெளிவரும்போது நிச்சயம் தலித் நாவல்கள் புதிய பரிமாணத்தை எட்டும்

தமிழின் பல மாற்று சிறுபத்திரிகைகளையும் ஒருசேர வாசிக்கும் தளமாக விளங்குவது 'கீற்று' இணையத்தளம். மார்க்சியம், பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம், மனித உரிமைகள் என பல்வேறு அரசியல் பார்வைகளை அடிப்படையாகக் கொண்ச இத்தளத்தை நடத்திவருபவர் இளைஞரான தோழர்.ரமேஷ். இந்தத் தளத்தின் மூலம் எந்த ஆதாயமும் பெறாத அதேநேரத்தில் கடுமுழைப்பையும் செலுத்திவருபவர். இப்போது கீற்று இணையத்தளத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களையும் சமகால இலக்கிய மற்றும் அரசியல் நூற்களையும் ஏற்றவுள்ளார் ரமேஷ். ஆனால் இதற்கென ஒரு நபரை நியமித்து அவருக்கான சம்பளம் மற்றும் தொலைபேசி போன்ற பல்வேறு செலவுகள் அவரை எதிர்நோக்கியுள்ளன. மேலும் கீற்று இணையத்தளம் குறித்த அறிமுகத்தையும் அனைத்துத் தமிழர்களுக்கும் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளையும் வேண்டுகிறார் தோழர்.ரமேஷ். மாதம் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் அரசியலில் ஆர்வமுள்ள நண்பர்கள் தங்களால் இயன்ற அளவில் மாதம் ஒரு தொகையைப் பகிர்ந்துகொள்ளலாம்.
மேலும் தொடர்புக்கு ரமேசின் தொலைபேசி: 9940097994, அவரது மின்னஞ்சல் editor@keetru.comரமேஷின் வங்கிக் கணக்கெண் : 603801511669iciici bank, chennai branch.

August 19, 2007

டணாய்க்கன் கோட்டை


ஒரே மூச்சாய்'டணாய்கண்கோட்டை' படித்து முடித்த கையோடு

இதை எழுதுகிறேன்

ஒரே மூச்சாய் படிக்குமளவு .............

வேகம்,

இயல்பான நடை,

ஒவ்வொரு கதாபாத்திரமும் கொண்டிருக்கிற முக்கியத்துவம்

வடிவம்,

ஆசிரியரின்வித்தியாசமான முயற்ச்சி

இவையெல்லாம் இருந்தாலும்
திப்பு பற்றியது என்பதுதான் மிகமிக முக்கியமான காரணம்.........................

ஆனால்

டணாய்க்கன் கோட்டை நாவலில்

திப்புவின் தந்திரங்களோ

திப்புவின் வீரமோ

திப்புவின் வேகமோ

திப்புவின் உலகலாவிய தொழில் மேன்மை முயற்சியோ

திப்புவின் அறிவுக்கூர்மையோ

நிச்சயமாக பதிவாகவில்லை

அவருடைய மத சார்பின்மை குறித்துகூட மிகஅழுத்தமான பதிவுகள் இல்லை

இது கூடப்பபரவாயில்லை

மனிதகுல வரலாற்றிலேயேமுதலும் இறுதியுமாக புலிப்படையை வைத்திருந்த,

கடல்தாண்டி லண்டணிலிருந்த ஆங்கிலகிராமங்களையும் நடுங்கவைத்த,

ஆங்கிலேயரை எதிர்த்துப்போராட ஒரு அய்க்கிய முண்ணனியைக்கட்டிய,

உலகமெல்லாம் இருந்த நுட்பங்களை கொண்டுவந்து இங்குள்ளவர்களுக்கு பயிற்றுவித்த,

ராக்கட் தொழில்நுட்பத்தை முதன் முதலில் உலகிற்க்கு அறிமுகப்படுத்திய,

மதச்சார்பின்மையை உயிராய் நினைத்து நடைமுறைப்படுத்திய,

கஜான காலியானாலும் பரவாயில்லையென்று மதுவிலக்கை அமுல்படுத்திய,

புதிய புதிய யூத்திகளை கையாண்டு வேளாண்மையை மாற்றியமைத்த

மற்றமன்னர்களைப்போல் கோழையாக மண்டியிட்டு

கப்பங்கட்டி கஞ்சிகுடிக்காமல்

களத்தில் வீரரோடு வீரனாக போரிட்டு மடிந்த

மாவீரன் சமூக அறிவாளன் திப்புவை ஒரு கேணக்காத்தான்,மண்டமாக்கான் போல்
சித்தரித்திருக்கிறது

அதற்க்கு மாறாக

ராணி லட்சுமியின் தந்திரங்களும்

ராணி லட்சுமியின் வீரமும்

ராணி லட்சுமியின் வேகமும்

இயல்புக்கு மாறாக

மிக மிக மிகஅதிக தூக்கலாக இருக்கிறது

அப்படியிருக்கும் பட்சத்தில்

அட்டையில் திப்புவையோ

உள்பக்கங்களில்

திப்புவின் ஆட்சி வரைபடங்களையோ,

திப்புவின் நாணயங்களையோ,

திப்பு பயன்படுத்திய பொருட்களையோ,

பயன்டுத்தியிருப்பதுஎதோ ஒவ்வாத ஒரு செயல் போல தெரிகிறது

திலகவதியின் அற்புதமான முன்னுரை மட்டுமில்லாமலிருந்தால்

வரலாறு தெரியாமல் புதிதாய் புத்தகத்தை கையிலெடுப்பவர்களுக்கு........

''திப்பு ஒரு கேணக்காத்தான்'' என்றுதான் நினைக்கத்தோன்றும் என்பதை
இங்கே வருத்தத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன்

திப்புவை தூக்கி நிறுத்தி திலகவதியின் முன்னுரை முதல் பதிப்பில் ஏற்பட்டஇருட்டடிப்பிற்க்கு
இரண்டாம் பதிப்பில் நாயுடுவுக்கு பிராயசித்தம் தேடிக்கொடுத்திருக்கிறது


விவேகானந்தரை வீழ்த்திவிட்ட வள்ளுவர் சிலை போல

August 16, 2007

என்ன வெங்காயாமோ எழவு கெரகம் - சோத்துக்கு.............. சாதிப்பெருமை மட்டும் அட்டாலிக்கு போகுது

இரட்டை டம்ளர்
இன்னும் இருக்கிறது
கோவை மாவட்டம்

கோவை புறநகர்

  1. மோளப்பாளையம்,
  2. சித்திரைச்சாவடி,
  3. வடிவேலம்பாளையம்,
  4. விராலியூர், நரசிபுரம்,
  5. அஜ்ஜனூர்,
  6. கண்டப்பாளையம்,
  7. காளப்பநாயக்கன் பாளையம்,
  8. ஜாகீர் நாயக்கன் பாளையம்,
  9. வெள்ளருக்கம் பாளையம்,
  10. சிலம்பனூர்.
  11. பெரியநாயக்கன் பாளையம்,
  12. காரமடை மேற்கு - புஜ்ஜனூர்,
  13. திம்மம்பாளையம்,
  14. கே.புங்கம்பாளையம்,
  15. புன்னையூர்,
  16. வெள்ளியங்காடு,
  17. கண்டியூர்,
  18. சின்னப்புத்தூர்,
  19. பெரிய புத்துர்,
  20. மங்களக்கரை புதூர்,
  21. மூலத்துறை,
  22. பாலப்பட்டி,
  23. வச்சினப்பாளையம்,
  24. கிட்டாம்பாளையம்,
  25. புதூர்.
  26. அன்னூர்
  27. :மோக்கனூர்,
  28. எ°. புங்கம்பாளையம்,
  29. பகத்தூர்,
  30. பல்லேபாளையம்.
  31. இரும்பொறை :
  32. கவுண்டன்பாளையம்,
  33. மீனம்பாளையம்,
  34. கனுவக்கரை,
  35. கள்ளப்பட்டி,
  36. சின்னரங்கம்பாளையம்,
  37. பெரியரங்கம்பாளையம்.
  38. அவிநாசி சேவூர்,
  39. நம்பியாம்பாளையம் (கருவலூர் சாலை),
  40. ராணியம்பாளையம்,
  41. தண்டுக்காரன்பாளையம்.ஈரோடு
  42. உட்கோட்ட எல்லைகாவிரி பாளையம்,
  43. குப்பன் துறை,
  44. உக்கரம்,
  45. கடத்தூர்,
  46. பனையம்பாளையம்.
  47. பல்லடம் பாப்பம்பட்டி,
  48. கண்ணம்பாளையம், சித்தநாயக்கன்பாளையம், லட்சுமி நாயக்கன்பாளையம், கரடிவாவி, பருவாய்,ஆராக்குளம், அனுப்பட்டி, லட்சுமி மில்ஸ், ஐயம்பாளையம், 11 சென்னிபாளையம், அப்பம்பாளையம், காளிகாளப்பட்டி,வேலம்பட்டி, மடுகபாளையம், எளவந்தி, துத்தாரிபாளையம்,கேத்தனூர், வெங்கிட்டாபுரம், பணப்பட்டி, பிரண்டம்பாளையம், சிக்கனத்தூர். மேட்டு கடை டீ கடை, பாரதியார் நகர், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.ராமாத்தாள் டீ கடை, பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை - 641 016.ஆசாரி மணி கடை, கரும்புரவிபாளையம், வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.பாலு உணவகம், கரடிவாலி, பல்லடம் , கோவை மாவட்டம்.வஞ்சியம்மன் உணவகம், லட்சுமி உணவகம், செம்மிபாளையம் அஞ்சல்,பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.குமார் உணவகம், சுக்கம்பாளையம், சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம், கோவை மாவட்டம்.அமாசையப்பன் கவுண்டர் உணவகம், காமராசர் நகர், கண்ணம்பாளையம் அஞ்சல், சூலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.கவுண்டர் தேனீர் நிலையம், சிக்கனூத்து, சுல்தான் பேட்டை ஒன்றியம், கோவை மாவட்டம்.தெற்குப்பாளையம், பொங்கலூர் ஒன்றியம், கோவை மாவட்டம்.புத்தரச்சல் டீ கடை, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் தாலுக்கா.நடுகவுண்டர் பெரிய பாப்பா கடை, வடவேடம்பட்டி, வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.சுப்பையா கவுண்டர் டீ கடை, கிருஷ்ணா நகர், கரடிவாலி, பல்லடம் தாலுக்கா, கோவை.முத்தக்கா டீ கடை, அனுப்பட்டி, பல்லடம் தாலுக்கா, கோவை.பழனிச்சாமி கவுண்டர் டீ கடை, வெங்கிட்டாபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.நடராஜ் டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.சுப்ரமணி டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.செந்தில் நாயக்கர் டீ கடை, துத்தாரிபாளையம் பிரிவு, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.எலவந்தி வடுகபாளையம், மூன்று டீ கடை, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.மாரப்பன் கவுண்டர் டீ கடை, காளிவேலம்பட்டி, சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம் தாலுக்கா, கோவை.கீர்த்திகா டீ கடை, வடவேடம்பட்டி, வடவேடம் பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.தனி சுடுகாடு உள்ள இடங்கள்:இராஜீவ்காந்தி நகர் வடவள்ளி, கணுவாய், நாதேகவுண்டன்புதூர், மேட்டுக்காடு, முல்லைநகர்,புதூர் புதுக்காலனி, போளுவாம்பட்டி, தெனமநல்லூர், ஆலாந்துறை, செம்மேடு, ஆறுமுகனூர், பச்சாபாளையம், கோவைப்புதூர், இடையர்பாளையம், லிங்கனூர் ஆதி தமிழன் நகர்.பெருமநாயக்கன் பாளையம். பெருமாநாயக்கன்புதூர்,குண்டடம் ஒன்றியம்எடையபட்டி, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.பாரபாளையம், கொடுவாய் ஒன்றியம், காங்கயம் வட்டம்.வலையபாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.வெல்லநத்தம் கிழக்கு.வெல்லநத்தம் வடக்கு, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.சாத்தநாயக்கன்பாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.தீண்டாமை கடைபிடிக்கும் பொது கோவில் :காளப்பட்டி மாரி அம்மன் கோயில்மாகாளியம்மன் வீரமாத்தியம்மன் கோயில், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவைசலூன்வளர்மதி சலூன் - மல்லேஸ்வரி சலூன்,பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை.ஹீராட் சலூன், சித்நாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, கோவைநிலா நிரோஷா ஹேர் லைன்ஸ், குப்புசாமி நாயுடுபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.

நன்றி பெரியார் முழக்கம்

August 14, 2007

1000ம் கோடி

கேபிள் டீவியை அரசே நடத்தும்
ஆனால்
டைட்டானியத்தை
டாட்டா நடத்தும்

கடன்வாங்கி
கார்ரோடு போட்டு

கால்ந்டையாளனிடம்

கட்டணம் கேட்கும்


August 13, 2007

நொய்யல் படம் -திருடப்பட்ட ஞானம்


1மணல் திருட்டு
2தண்ணி திருட்டு
3மூளைத்திருட்டு


நொய்யல் இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சிமலையில், முட்டத்தில் தொடங்கி தன்னுடைய வரலாற்றை ஒலித்தபடி... இன்னும் உறங்காமல் சென்று கொண்டிருக்கிறது. நொய்யலை வைத்து தண்ணீரை தனது பிடிக்குள் கொண்டுவர, வியாபார முகத்தை மறைத்து, சேவை முகமூடியை போட்டுக்கொண்டு ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறதென்றால் இன்னொரு திருட்டு ஆரவாரத்துடன் அரங்கேரியிருக்கிறது. அதுதான் நொய்யல் பற்றிய சேகரிக்கப்பட்ட புத்தித்திருட்டு. ஆம் கடந்த பத்தாண்டுகளாய், மிகவும் சிரமப்பட்டு ஆர்வத்தோடு நொய்யலை படமாக எடுக்க ஆவணங்களையும் ஆதாரங்களையும் சேர்த்து வைத்த, நொய்யல் படம் வர காரணமாக காட்சியமைப்பு முதல் களம் வரைக்கும் இருந்த, ஏன் நொய்யல் பற்றி இயக்குநர் என்று போட்டுக்கொள்கிற பாலமுருகனுக்கே பல பின் புலங்களைஅறிமுகப்படுத்தியவர் ர.முருகவேள் தான்.இந்தப்பெயர் எங்கேயோ கேட்டமாதிரி இருக்கிரதல்லவா? ECONOMIC HITMAN(ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்) மொழிபெயர்த்த அதே முருகவேள்தான் ஆனால் அவருடைய பெயரை ஒரு சம்பிரதாயத்துக்காகக்கூட அந்தப்படத்தில் பதிவு செய்யவில்லை என்பது வருத்தப்பட வைக்கிறது .
நொய்யல் என்றாலே திருட்டுதான் போலிருக்கு !
வெறும் சரக்குகளால்,
பணத்தால்.....
நொய்யலை மறைத்து விடமுடியாது என்பது காலம் கூவத்தொடங்கிய பின் தான் தெரியும் போல

August 10, 2007

1366


இந்த அறையில்
தற்கொலை செய்தவர்கள்
எண்ணிக்கை அதிகம்...
ஆனால்
இது
நான் மீண்டும்
உயிர்தெழுந்த இடம்

அங்கே
மார்கோபோலோக்களும்
மாமுனிகளும்
தீர்ந்துபோய் நிறைத்திருப்பார்கள்
எம்மை
ஒளிந்திருப்பார்கள்
கடவுள்கள்
கழிப்பறையில்

சிறுநீர் கழித்த
கிரீடங்களில் ஒலிக்கும் கீர்த்தனைகள்
வண்டுகள் துளைத்திட
காதுகள் விரியும்

சுதந்திரங்களின் முகவரியில் குவியும்
ஒலியும்
ஹேங்கரில் மாட்டப்பட்ட சிறகுகளும்
யாரும் தடுக்கமுடியாதபடிக்கு வளரும்

எல்லாம்...........குமாரசாமி
வாடகை கேட்கும்

பத்தாம் தேதிவரைக்கும்

August 05, 2007

கட்டை



ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்தில்
யாரும் வராத மாமரத் தோப்பில்
கூவும் குயிலின் தென்றல் பாட்டில்
ஆடும் இலைகளின் சலங்கை ஒலிப்பில்
தன்னை மறந்தது
தனியே கிடக்கும்
சின்னக் கவியே!
சிந்தனை பலமா?
என்ன செய்கிறாய்?ஏகாந்தத்தில்!
இன்னும் கற்பனைஎழுந்தபாடில்லையோ!?

தலைவனை பாடினாய்!தனிமையை பாடினாய்!
தனிமையின் தவிப்பை, தாகத்தை பாடினாய்!
கல்லைப்பாடினாய்! காற்றைப்பாடினாய்!
காற்றில் அலையும் கீற்றைப்பாடினாய்!
இளசின் அழகில் மயங்கிச்சாய்ந்து
இடையை,நடையை,தொடையை பாடினாய்!

அய். ஆர் இருபதை
ஆடுதுறை முப்பதை
விளைத்தவன் பசியிலே
உழழும் கொடுமையை
உன்
பாட்டிலெடுத்துக்
காட்டியதுண்டா-இல்லை
வியர்வை குலத்தின்
விலாதிருடும்
சதிகாரர்களை
சாடியதுண்டா

என்ன கிழித்தாய்
எழுத்துப்பணியிலே
எழுத்தெனுமாயுதம்
எதற்க்குனக்கு
எழுதுகோலை
எடுத்துவீசு
* * *
விரிந்து பரந்திருக்கும்
விஞ்ஞானத் தொழில்நுட்பம்
வானத்தில் உட்கார்ந்து
வா'வென்றழைக்கயிலே

இன்னும் நீ

இரண்டாம் நூற்றாண்டின்
இருட்டுக்குள்ளேயே

பசித்துயரம் தாழாமல் முரசத்தின் மேலேரி
படுத்துறங்கியெழுந்தபின்னும் மோசிக்கீரன்
பட்டினியைப்பற்றியொருவரிகூடப்பாடமல்
பாவெடுத்து மன்னனுக்கு கால்கழுவிவிட்டானாம்...................... * * *

காதிலிருந்தது கையிலிருந்த்தது
ஏதுமில்லாமல் ஆயினபின்னும்
கால் செருப்பை
கழட்டியடித்து
வீட்டுக்கு வெளியெ
விரட்டிவிடாமல்


'இந்தாருங்களத்தான்,இதையும் விற்று
சின்ன வீட்டுக்கு போய்வாருங்கள்'
என்ற
கண்ணகிப்பெண்ணெல்லாம்
கற்புக்கரசியாய்
பத்தினிதெய்வமாய்
பண்பாட்டு சின்னமாய்.
* * *
முல்லைக்கு தேர் கொடுத்த

முட்டாள்தனத்தையெல்லாம்
வள்ளளென்று யாத்துக்குவித்து
வரலாற்றின் பக்கங்களில்...சேறடித்துப்போனார்கள்
பொற்காலமென்றுபோற்றிய..
அவர்கள்ஆட்சியின் மறுபுரத்தில்
அவலமே வாழ்கை
* * *
சங்ககாலந்தான் இருட்டுக்குளென்றால்
இங்கென்ன வாழ்கிறதாம்

கொடுகின்றகாசுக்காய்
கொள்கைகளை விட்டெரிந்து
முதுகெலும்பை அடகு வைத்து
மூலையிலே உட்கார்ந்து
துறை தேடி தினை தேடி
துவக்க வரி தேடி..............

தெங்கிளநீர் கொங்கையினாள்
செங்கனிபோல் மங்கையினாள்
புணர்வதர்க்கு மெத்தையினாள்
புத்தம்புது தத்தையினாள்
என்றெல்லாம்
எழுதுகிற
மதனகாம பயல்களெல்லாம்
மண்ணிலே கவிஞராக
உலா வரும் போது
உள்ளுக்குள் எரிகிறது

விபத்திலொருத்தி
விழுந்துகிடந்தாலும்
மர்புதெரிய தொடை பிதுங்க
மல்லாந்து கிடந்தாள்
என்றுதான்
எழுதத்தோன்றும் இந்த
எழுத்தாளப்பயல்களுக்கு

இவர்கள்கையிலிருப்பது


காமனின் அம்பா!?
கேமலின் பென்னா!?
மைக்கு பதிலாய் ஊற்றி எழுதுவது
சாக்கடை நீரா?
முருங்கைக்காய் சாறா?
* * *
இந்த
எதார்தங்களை
எட்டிஉதைத்துவிட்டு
கனவுகளோடு
கட்டிப்புரளாதே

இலக்கிய வியாதிகளுக்கெதிராகஆயுதமெடுப்போம்
-நாமேஆயுதமாவோம்

இது மாமேதையின் வைரவரிகள்

-இதை
நாட்குறிப்பேட்டின் ஓரத்தில் அல்ல
இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்

சம்பாதிப்பதர்காக எழுதாதே
எழுதுவதர்காக சம்பாதி ....

* * *

July 21, 2007






கசிவுநீர்க்குட்டையை
அலகால்
உருஞ்சிய வெலுத்த நாரை

பறந்து போய் வானாமாகி ப்போனது

துடிப்பேரி கரையேறிய மீன்கள்
அந்நிய பயணத்தில்
லயித்துப்போய் காலனிகளுக்காக
செதுக்கிக்கொண்டிருந்தது

மண்ணை சடுதிவழி அடைய
குடைந்தது நண்டு



தவளைகள் மாற்று இருப்பிடங்களை
நோக்கிய பயணத்தில் களைத்திருந்தது

வனம் நொறுங்கிய பொழுதுகளை
எண்ணிய படி தள்ளாடிக்கொண்டிருக்கிறது
ஒரு
வண்ணத்துப்பூச்சி

முகத்தை மறைத்துக்கொண்டு
ஒரு
மரங்கொத்தி
அலகை உடைத்து
தற்க்கொலையில்
வீழ்ந்துகிடந்தது

கொடங்கு பள்ளத்திலிருந்து
சோளக்காட்டுக்கு வந்து
ஊளையிடும் நரிகள்
சத்தமடங்கி
ஈன வலியில் காற்றை கணமாக்கிக்கொண்டிருந்த்து

ஆறு தன் உயரத்தை குறத்துக்கொண்டது

அருவி பாதியில் உறைந்தபடி நின்றது

வானமே கூரையாச்சு
வையகமே வீடாச்சு

ஒரு



சிறப்பு பொருளாதார மண்டலம்

July 17, 2007





குப்பைகளுக்கு நடுவில்
காவி படிந்த கொடிக்கம்பத்தின் அருகில்
எப்போதும் கிடக்கிறது ஒரு
கசாப்பு முட்டி

அந்த முட்டிக்குள்ளிருந்து
கேட்டுக்கொண்டிருக்கிறது
குழந்தைகளின் கதறல்
குமரிகளின் முனகல்
ஆண்களின் ஓலம்

மூக்கை பொத்தும் கொள்கை முழக்கம்


அறுக்கப்பட்ட ஆணுறுப்புகளில்
பீச்சியடித்த விந்தும்
சிதைக்கப்பட்ட முலைகளில்
கசிந்தபாலும்

கருப்பைகளை கிழித்து
ஒழுகும் குழந்தைகளின்
மூளைக்கருவில்
பூர்வீகம் தேட மை தயாரிக்கும்
வெற்றிலைகளில்
உதிர்கிறது
ஒற்றைக்கண்கள்

எங்கும் முத்திரையிடப்படவில்லை


பீச்சியடிக்கிற மலக்கூழ்
வழித்து
உன் செருப்புகளில்
நசுங்கும்
தலைமுறை

காயங்களிலிருந்துவழிகிற குருதியில்
திலகமிட்டு எழுவதர்க்கு முன்பே
வரலாற்றை கைப்பற்றி
பட்டொளி வீசிப்பறக்கிறது
உனது பதாகை

வனையும்போது
கூடவே இருப்பேன்
வேகம்
கார்திகையை விட்டுவிட்டு
தைக்கு போய்விடும்

கலயங்களில்
சேகரிக்கப்படுகிறது
சேறு

சந்ததிகள்
காலம் பிசந்து போட்டதில்
எல்லயைதாண்டி வெகுதூரத்தில்

July 10, 2007

வரும்போதெல்லாம்
வாந்தியெடுப்பது
குமாரின் இயல்பு
இப்பொது
அவன் வாந்தியெடுத்த
அறையின் மூலையில்
கிடக்கிறது
ஒரு
கிழிந்துபோன பத்து ரூவாய் நோட்டு








புழுதிபடிந்த
வீட்டின் கூரைகளில் நின்று
கரைந்துகொண்டிருக்கும் குருவிக்கு தெரிந்திருக்கிறது
அவளது மூச்சுக்காற்று

வயிற்றுக்கு
ஒருபோதும்
எதையும் செய்ததில்லை

எழுதிய அக்கி
நகர்ந்து சென்று
சுவர்களுக்குள் புகுந்து
தேவதைகளாகி
காலத்தை
குடித்துத்தீர்க்கிறது
எரவாரங்களில் குடியிருந்துகொண்டு

எசகடவக்குதிரைகள்
இன்னும்
இரவுகளில்
இவ்வழியே ஓடிக்கொண்டிருக்கிறது

எருக்கம்பூவெடுத்து மாலையாக்கி
மரத்துக்குபோட்ட
ரகசியம்
இன்னும்யாருக்கும் பிடிபடவில்லை

அந்த இடங்களில் முளைத்திருக்கும்
குழந்தைகளைப்பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறாள்
ஆவரம்பூ இடித்து காப்பி கொடுத்தபடி

நாக்கில் வந்து உட்கார்ந்து போகும்
எதிலும் ராமாப்பிள்ளைப்பாட்டிக்கு பங்கு உண்டு

கலகத்தை முன்னிறுத்தும் அரவாணிகளின் குரல்






பெண்ணும் ஆணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கின்றதோ, அதைப் போலவே அலிகள் என்றழைக்கப்படும் அரவாணிகளையும் இயற்கைதான் படைத்திருக்கிறது என்பதில் உண்மை இருக்கின்றது. பெண்ணும் ஆணும் கடவுளின் படைப்பு என்று நம்பிக்கை சார்ந்த ஆன்மீகத் தளத்தில் நின்று பார்த்தாலும் கூட, அரவாணிகளும் கடவுளின் படைப்புதான் என்பதில் நம்பிக்கை கொண்டாக வேண்டும். ஆக, பெண் என்பது ஒரு பாலினம்; ஆண் என்பது இன்னொரு பாலினம், அரவாணி என்பது மூன்றாம் பாலினம் எனக் கொள்ளலாம். ஆனால், சமூகத்தில் நிலவுகிற எல்லாச் சட்டகங்களுமே (Frams) மூன்றாம் பாலினத்தை அங்கீகரிப்பதில்லை. சமூகத்தின் பொதுத் தளங்கள் யாவும் அரவாணிகளை அருவருப்பான மனநிலை சார்ந்த மக்கள் பிரிவாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைய வெகுமக்கள் ஊடகங்கள் யாவும் அரவாணிகளைக் கேவலமாகத்தான் காட்டி வருகின்றன. இத்தகைய ஊடகங்களால் உருவாக்கப்படும் கருத்தியலின் விளைவுகளால் சமூகமே இவர்களை இழிவான பிறவிகளாகப் பார்த்து வருகின்றது. அரவாணிகள் குறித்து அறிந்து கொள்ள நிறைய இருக்கின்றன. அரவாணிகள் பற்றிய தரவுகளை அவர்களே முன்மொழிகிற போதுதான் அது முழுமை கொள்ள முடியும். அவர்களிடம் கேட்டுப்பெறுகிற அல்லது பழகிப் பகிர்ந்து கொள்கிற செய்திகள் முழுமையான தரவுகளாக அமைந்திடாது. ஆயினும், அரவாணிகளைக் குறித்த முதல்நிலைப் புரிதலுக்காக சில அரவாணித் தோழர்களிடம் பெற்றுக் கொண்ட வாய்மொழித் தரவுகளை வைத்துக் கொண்டு சில புள்ளிகளைத் தொட்டுக் காட்ட முயற்சிக்கிறது இக்கட்டுரை.அரவாணிகள் உலகம் என்பது இங்குள்ள பெண் மற்றும் ஆண் உலகத்திலிருந்து தனித்து அமைந்திருக்கிறது. அரவாணிகளாகச் சேர்ந்து கொள்கிற அவர்கள் ஒரு தனிச் சமூகக் குழுவாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். ‘அரவாணிகள் கம்யூனிட்டி’ என்ற அடிப்படையில் ‘ஜமாத்’ என்று வழங்கப்படுகிறது.ஆணின் உடல்-உணர்வுகள் பெண்ணின் உடல்-உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருப்பதைப் போலவே அரவாணிகளும் பெண்/ஆண் உடல் - உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருக்கிறார்கள்.எல்லோராலும் நினைக்கிற மாதிரி ஓர் ஆணோ அல்லது பெண்ணோ ஒரு குறிப்பிட்ட நாளில் திடீரென்று ஞானம் வந்து அரவாணியாக மாறிவிடுவதில்லை. (பெரும்பாலான அரவாணிகள் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்கள் என்பதாலும், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுதல் என்பது மிகக் குறைவு என்பதாலும் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய அரவாணிகளின் மாற்றங்கள் குறித்துப் பேசப்படுகின்றன.) ஆணாகப் பிறந்த அரவாணிகள் குழந்தைப் பருவத்திலேயே பெண் சார்ந்த அடையாளங்களையே விரும்புகின்றனர். பெண்களின் விளையாட்டுக்கள் எனச் சொல்லப் படுகிறவற்றின் மீதே ஈர்ப்பு கொள்கின்றனர். திரைப்படங்களில் வருகிற கதாநாயகி போல ஆடுவதும், வீட்டில் உள்ள பெண்களில் உடைகளான பாவாடை, தாவணி உடுத்திக் கொண்டு வீட்டுக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் அழகு பார்த்துக் கொள்வதிலும், துண்டை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டு சடை மாதிரி முடியை முடிந்து போட்டுக் கொள்வதைப் போல துண்டை எடுத்துக் கட்டிக் கொள்வதும் கண்களுக்கு மைதீட்டிக் கொள்வதும், வளையல் மாட்டிக் கொள்வதுமாகச் சின்ன வயதிலேயே இவற்றின் மீதெல்லாம் ஈர்ப்பு கொள்கிறார்கள். இம்மாதிரியான செய்கைகளின் போது வீட்டில் உள்ளவர்களோ பக்கத்து வீட்டாரோ உறவினர்களோ கண்டிக்கிறபோது அவர்களுக்குத் தெரியாமல் செய்து கொள்வதில் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். பொதுவாகவே இவர்களுக்கு குழந்தைப் பருவ காலத்தில் பசங்களோடு சேருதல் என்பது பிடிக்காது, குழந்தைப் பருவத்தைத் தாண்டத் தாண்ட பெண்போல இருக்க விரும்புதல் அதிகமாகிப் போகிறது என்கிறார்கள். பெண்போல ஆடுவதும், உடை உடுத்திக் கொள்வதும், பேசுவதும் மற்றவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றினாலும், பெண்மையை உணர்கிற மாதிரியும் - தான் பெண் என்பதை யாருக்கோ உணர்த்துகிற மாதிரியும் எதிர்த்தாற் போல இருக்கும் மனம் உணர்த்திக் கொண்டே இருக்குமாம். அந்தப் பருவத்தில் இதுபோன்று இருப்பது வெட்கத்துக் குரிய விசயம் என்று நல்ல பிரஞ்ஞை இருந்ததினால் வெளியில் இதைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை.பெண்கள் பூப்படைகிற அல்லது ஆண்களுக்கு மீசை முளைக்கிற பருவத்தில் - பருவத்தில்தான் மிகப்பெரிய சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. பைத்தியம் பிடிப்பது மாதிரி உணர்வதும், வாழ்வதே சரியில்லை எனப் புலம்பிக் கொள்வதும், என்னமோ ஆகப்போகிறது என்ற பயமும் அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும். பெரும்பாலான அரவாணிகள் அந்தப் பருவத்தில் பைத்தியம் ஆகியிருக்க வேண்டும் அல்லது தற்கொலை செய்திருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். அந்தப் பருவத்தில் தங்களுக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களை உணரத் தொடங்கி விடுகிறார்கள். இதைவிட முக்கியமானது ஒவ்வொரு அரவாணியும் தனக்கு முன்பாக - முன்மாதிரியாக இருக்கும் அரவாணியைப் பார்த்த பிறகுதான், அதாவது அரவாணியும் வெளியே வந்து நடமாட முடியும்; உயிர்வாழ முடியும்; பெண்ணாகவும் ஆகிக் கொள்ள முடியும்; புடவை கட்டிக் கொள்ள முடியும் என்கிற அறிவும் முழுமையான பிரஞ்ஞையும் எற்பட்ட பிறகுதான் தன்னையும் ஓர் அரவாணியாக உணரத் தொடங்குகிறார்கள். அரவாணிகளைப் பார்க்கும்போது தொடக்கத்தில் பயமும் வியப்பும் வியப்பும் ஏற்பட்டு நாளாக நாளாக அவர்களோடு பழகும் வாய்ப்புகள் கிடைத்தபிறகு - அவர்களிடம் நிறையப் பேசப் பேச சில விசயங்களை உணர்வதாகச் சொல்கிறார்கள். வெளியில் வந்துவிட்ட அரவாணிகளோடு நெருக்கத்தையும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வது தேவையெனக் கருதுகிறார்கள். இத்தகைய சூழல் அதிகமாக வாய்க்கிறபோது, ஒருவிதமான வெறி தொற்றிக் கொள்வதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தான் ‘ஆம்பிளை’/ ‘ஆண்” என்கிற அடையாளத்தோடு வாழவே முடியாது என்ற நிலை வந்துவிடுகிற போதுதான் அரவாணியாக உணரக் கூடியவர்கள் தங்கள் ‘இருப்பு’ குறித்த சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. தங்களின் அடையாளத்தை எப்படித் தொடர்வது என்று தவிப்பதாக ஆகிவிடுகிறது.சுருக்கமாகச் சொல்வதெனில், இந்தப் பருவத்தில் அவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. உடலால் ஆணாகவும் உள்ளத்தால் பெண்ணாகவும் ஆகிக் கொள்கிறார்கள். இப்படியாகத் தனக்குள்ளே நிகழக்கூடிய மாற்றங்களைத் தெளிவாக உணர்ந்த பிறகு ஆண் தன்மையிலிருந்து விடுபடவே அவர்கள் விரும்புகின்றனர். தான் அரவாணி என்பதைத் தெரிந்து கொண்ட ஒருவர் தன்னை அரவாணி என்று பகிரங்கப்படுத்திச் சொல்லிக் கொள்ள முன் வருவதில்லை. அப்படியே முன்வந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை.படித்தவர் - நல்ல வசதியான குடும்பப் பின்னணி சார்ந்தவர் உயர்த்திக் கொண்ட சாதியில் பிறந்து தன்னை அரவாணியாக உணர்ந்து கொண்டிருக்கும் எல்லோருமே தான் அரவாணி என்பதைச் சொல்லிக் கொள்ள முன்வருதில்லை. தான் அரவாணி என்பது பிறருக்குத் தெரிந்து விட்டால் குடும்பத்துக்கும் சாதிக்கும் கவுரவக் குறைச்சலாக இருக்கும் என்பதால் மிகச் சிறுபான்மை அளவில்தான் அரவாணியாக வெளியே வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து அரவாணியாக உணரக் கூடியவர்களில் பெரும்பாலோர் வெளியே வந்து விடுகிறார்கள். இந்நிலையில் பெண்போல இருக்க விரும்பும் ஆணின் செயல்கள்யாவும் பெண்ணாக உணர்வதாக அமைகிற போதும், ஆண் உடலுக்குள் பெண்ணாகச் சிறைபட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறபோதும் ஒரு முடிவெடுக்கும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வீட்டிற்கு தான் அரவாணி என்பதைச் சொல்வதற்குப் பயந்து போனவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார்கள். சில சமயங்கள் அரவாணியாக உணர்ந்தவர்களை வீட்டார்களே அடித்து உதைத்து வீட்டை விட்டே துரத்தி விடுகிறார்கள். ஆக அரவாணியாக மாறிப்போனவர்களைக் குடும்பமும் கை கழுவி விடுகிறது.ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அக்குடும்பத்தாரோடு வாழ முடியாமல் போகிற அவலங்கள் எல்லா அரவாணிகளுக்குமே நேர்ந்து வருகிற கொடுமைகள். வெளி உலகத்திற்கு ஆணாகவும் - தன்னளவில் பெண்ணாகவும் இருப்பது என்பது இரட்டை வேடம் போடுதல் என்பதை உள்ளுக்குள் உணர்ந்தவர்கள் அரவாணியாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் களோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். உடல் தோற்றத்தாலும் பெண்ணாக மாற விரும்புகிறவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். பெண்ணாக உணரக்கூடிய பெரும்பாலான அரவாணிகள் ஆண் அடையாளத்தை விரும்புவதே கிடையாது. அறுவை சிகிச்சை செய்தோ அல்லது சில சடங்கு முறைகளின் மூலமோ ஆணுறுப்பை வெட்டி எறிகிறார்கள். இதன் மூலம் தனக்குள் இருக்கும் ஆண் தன்மை அழிந்து போனதாக உணர்கிறார்கள்.தன் குடும்பத்தில் பிறந்த ஒருவர் - தனக்குத் தெரிந்த ஒருவர் அரவாணியாக மாறிடக் கூடாது என்று கருதுகிறார்கள். இது அவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளால் ஏற்படக்கூடியது என்று நடுநிலைத் தன்மையோடு பார்க்க முடியாமல் கலாச்சார அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஓர் அரவாணி இருந்து கொண்டிருப்பது குடும்பத்திற்கு அவமானமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்கள் அரவாணிப் பிள்ளைகளை அங்கீகரிப்பதில்லை.குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழல் அரவாணிகளுக்கு ஏற்படுவதால், ஜமாத் என்றழைக்கப்படும் பெரும் குழு வட்டத்தோடு தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழு வாழ்க்கைக்குள் உறவு முறைகளை வகுத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழு வகுத்திருக்கும் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஒவ்வொரு அரவாணியும் இருக்க வேண்டும் என்கிறார்கள். அந்தக் கட்டுப்பாடுகளை மீறுகிற அரவாணிகளுக்குத் தண்டனை நிரம்ப உண்டு. பெரும்பாலான குழுக்கள் அரவாணிகளை ஒரு முதலீடாகவே பயன்படுத்தி வருகின்றன. தங்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து கொஞ்சமாவது இளைப்பாறிக் கொள்வதற்கும், தங்களை ஏதாவது ஒரு வகையில் உயிர்ப்பித்துக் கொள்வதற்கும், பிச்சை எடுத்தல் - பாலியல் தொழில் போன்றவைகளை அரவாணிகள் மேற்கொள்கின்றனர். பாலியல் தொழில் என்பது இவர்களின் விருப்பம் சார்ந்த தொழில் என்பதை விடவும், அவர்களுக்கு அம்மாதிரியான தொழில் மட்டும்தான் செய்ய முடியும் என்கிற நிலைமைகiள் இருக்கின்றபோது சமூகத்தின் பொதுப்புத்தி என்பது அரவாணிகளை பாலியல் தொழில் செய்வதற்கென்றே பிறந்தவர்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்பார்வையானது, அறியாமையில் வருவதல்ல; ஏற்கெனவே நிலவுகிற கருத்தியல் மதிப்பீடுகளின் தொடர்ச்சியாக வருவது. இம்மாதிரியான மதிப்பீடுகள் தோன்றுவதற்கு அரவாணிகள் நடத்தை முறைகள் காரணமாகச் சொல்லப் படுகின்றன பொது இடங்களில் உலாவுகிற அரவாணிகள் பெண்போல பாவித்துக் கொண்டு - தன்னிடம் இல்லாத பெண் நளினத்தை வலிந்து வருவித்துக் கொள்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன.ஒருவர் தன்னை பெண் என்று சொல்கிறாரோ இல்லையோ - ஆனால், தன்னை ஆண் என்று சொல்லிவிடக் கூடாது என உள்ளுக்குள் நினைத்துக் கொள்கிறார்கள். தன்னை ஒரு ‘ஒம்போது’ என்று சொல்வதை கூட சோகத்திலும் சந்தோசமாய் எடுத்துக் கொள்கிறார்கள். தான் பெண் இல்லைதான்; ஆனாலும் ஆண் என்று பிறர் சொல்லவில்லையே எனச் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். பெண் தன்மைக்கான அங்கீகாரமாக அதை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இந்த மாதிரி நடந்து கொள்வதால்; ஆண்கள் தங்களின் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஊடகமாகப் பார்க்கிறார்கள். இம்மாதிரி அணுகுவதை அரவாணிகளும் விரும்புகிறார்கள். ஏனெனில் ஒருவன் தன் கையைப் பிடிக்கிறான்; மார்பகங்களைப் பார்க்கிறான்; தன்னோடு உறவு கொள்ள விரும்புகிறான் எனில் தன்னிடம் பெண் தன்மை இருப்பதினால்தானே அவ்வாறு நடந்து கொள்கிறான் என்று உள்ளுக்குள் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். ஆக, அரவாணிகளின் இம்மாதிரியான செயல் பாடுகளை ஆண் தன்மையினைத் தூக்கி எறிவதற்கான முயற்சிகளாகக் கருத முடிகிறது.மனிதப் பிறவியாகவே பிறந்த அரவாணிகளைக் கேவலமான பண்பாட்டுக் குரியவர்கள் எனச் சொல்வதற்குப் பின்னால் இந்தியச் சூழலில் இந்து மதம் சார்ந்த ஆண் ஆதிக்கம் பேசுகிற தொன்மங்கள் வினையாற்றுகின்றன. இந்து மதம் சிலவற்றைப் புனிதமெனவும் அப்புனிதத்திற்கு மாறாக இருக்கக்கூடிய / விலகி நிற்கக் கூடிய / எதிராக இருக்கக் கூடிய யாவும் தீட்டு என இழிவு படுத்தி வைத்திருக்கிறது. இந்து மதம் சார்ந்த கருத்தியல்கள் சமூகத்தின் பொதுக் கருத்தியல்களாகப் பரப்பப்பட்டிருக் கின்றன. இந்து மதம் சார்ந்த கருத்தியல்கள் ஒன்றுதான் ‘லிங்க மய்ய வாதம்’. தந்தை வழிச் சமூகத்தின் எச்சங்களை இக்கருத்தியல்கள் தாங்கி நிற்பதைப் பார்க்கலாம். ஆண் மேலானவன்; உயர்வானவன்; வலிமையானவன்; ஆளக் கூடியவன்; புனிதமானவன் என்பதாக லிங்க மய்ய வாதம் ஆண் தலைமையை முன்வைக்கும். அதே போல பெண்ணின் யோனி வழிப் புணர்ச்சிதான் இயற்கையானது; அதுதான் புனிதமானது என்ற கருத்தியலும் சமூகத்தில் மேலோங்கி நிற்கிறது. இக்கருத்தியல்கள் அரவாணிகளை எப்படிப் பார்க்கிறது? அரவாணிகள் ஆண்குறியோடு பிறந்திருந்தாலும் ஆண்குறி தனக்கு இருப்பதை விரும்பாதவர்கள். ஏதாவது ஒரு வகையில் ஆண் குறியை அறுத்து எறிந்து புதைத்து விடுகிறார்கள். இதுவே லிங்க மய்ய வாதத்தைத் தகர்க்கும் தன்மை கொண்டது. லிங்க மய்ய வாதத்திற்கு நேர் எதிரான கலகத்தன்மை கொண்டது. இன்னொன்று அரவாணிகளுடனான பாலியல் புணர்ச்சி என்பது யோனி வழிபட்டதல்ல. ஆக, லிங்க மய்ய வாதத்திற்குள் பெண் கீழாக வைக்கப்படுகிறாள். லிங்க மய்ய வாதத்திற்குள் வராத / எதிராக இருக்கும் அரவாணிகள் இழிவானவர்களாகக் கருத்தாக்கம் செய்கிறது. அவ்வாதம், இதன் நீட்சியாகத்தான் அரவாணிகளைக் கேவலமாகப் பார்ப்பதும், அங்கீகரிக்காமல் இருப்பதுமான நிகழ்வுகள் அமைகின்றன.அரவாணிகளுக்கான இடம் மறுக்கப்பட்டே வருகின்றன. பெரும்பாலான அரவாணிகள் கல்வியைத் தொடர முடியாமலே போகின்றனர். வேலை தேடிச் செல்கிறபோது அவ்வேலைக்கு லாயக்கற்றவர்கள் என ஒதுக்கப் படுகின்றனர். சான்றிதழ்களில் பாலினம் எனக் குறிக்கப்பெறும் இடத்தினில் பெண் என்றோ ஆண் என்றோ பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அரவாணி எனும் மூன்றாம் பாலினத்தைப் பதிவு செய்து கொள்வதற்கான அனுமதியும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை. இந்நாட்டில் பிறந்த குடிமக்கள் என்ற நிலையில் கூட அரவாணிகள் நடத்தப்படுவதில்லை. குடும்ப அட்டைகள் வாக்காளர் பதிவுகள் வங்கிக் கணக்குகள் போன்றவற்றில் அரவாணிகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டே வருகின்றன. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்ற மருத்துவச் சான்றிதழ் கொடுத்தல் மிகவும் அரிதாக இருக்கிறது. ஆகவே அரவாணிகளுக்குச் சட்ட அங்கீகாரம் மிக முக்கியமானதாகப் படுகிறது.இங்கே பெண்களுமே அரவாணிகளைக் கேவலமாகத்தான் பார்க்கிறார்கள். சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் பாதுகாப்பும் பகிர்தலும் குறைந்தளவேனும் கிடைக்கப் பெறும். ஆனால், அரவாணிகளுக்கு அத்தகைய வாய்ப்புகள் அமைவதில்லை. ஏனெனில், திருமணம் என்கிற ஒன்று இவர்களுக்கு அமைவதில்லை. பெரும்பாலான ஆண்கள் பாலியல் ஊடகமாகத்தான் அரவாணிகளைப் பார்க்கிறார்களே தவிர, அரவாணியை மனைவியாக / துணைவியாக / வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் பங்காளராக ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவேளை, அரவாணிகள் திருமண உறவை விரும்பினால் கூட அவர்களை மணந்து கொள்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அதற்குக் காரணம், அரவாணிகளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. சராசரிப் பெண்ணைப் போல தாய்மைப் பேறு அடைய முடியாது. ஏனெனில் அரவாணிகளுக்குக் கர்ப்பப்பையே கிடையாது. இந்தக் கர்ப்பப்பை தான் பெண்ணை அடிமைச் சிறையில் வைத்திருக்க உதவுகிறது. அரவாணிகளோ கர்ப்பப்பை இல்லாமல் இருந்தும் கூட அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. மனித இன மறுஉற்பத்தியை அரவாணிகள் செய்ய முடியாது என்பதனாலே அவர்கள் ஒதுக்கலுக்கு உள்ளாகிறார்கள் என்பது குறிப்படத்தக்கது. பெண்கள் தங்களின் அடிமைச் சிறையிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் கர்ப்பப் பைகளை அறுத்தெறியுங்கள் என்றார் பெரியார். இதைச் சமூகம் ஓரளவேணும் உணரத் தொடங்கினாலும் கூட, கர்ப்பப்பைகளே இல்லாத அரவாணிகளைப் பற்றிப் புரிந்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறது. அதற்குக் காரணம், அவர்களின் பிறப்பே கலகமாக அமைந்திருப்பதுதான். ஒரு பெண் ஆணுக்குரிய சுதந்திரத்தோடு வளர்ந்தால் எப்படி இருப்பாளோ அப்படித்தான் அரவாணிகளும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணை பெண்ணாக வளர்க்காமல் ஆணுக்குரிய சுதந்திரத்தோடு வளர்த்தால் தன்னுடைய இருபது வயதில் எப்படி இருப்பாளோ அப்படித்தான் அரவாணிகளும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரவாணிகளின் அடிப்படையையே புரிந்து கொள்ள மறுக்கிறது சமூகம், அரவாணிகளுக்கு உழைப்பே மறுக்கப்படுகிறது; இருத்தலே கேள்விக்குள்ளாகிறது; பெற்றோர்களே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.அரவாணிகளைக் குறித்து தவறான கற்பிதங்களைச் சமூகம் உருவாக்கி வைத்திருந்தாலும், அதை மாற்றிட சமூக மாற்றத்திற்கான இயக்கங்களும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அரவாணிகளும் மனிதர்களே என்ற பார்வை மாற்று அமைப்புகள் / இயக்கங்கள் போன்றவற்றில் வந்திருந்தாலும் அரவாணிகள் குறித்த செயல்பாடுகளைப் பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களே கையாண்டு வருகின்றன. இத்தொண்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கணக்கு காட்டுவதைத்தான் மேற்கொள்கின்றன என்ற விமர்சனங்கள் பரவலாக உண்டு. அரவாணிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் எய்ட்சு தொடர்பான விழிப்புணர்வு இயக்கங்களையும் - ஆணுறை விநியோகம் தொடர்பான காரியங்களையும் செய்து வருகின்றன. இவ்வேலைகளில் அரவாணிகளே பெரும்பாலும் ஈடுபடுத்தப் படுகின்றனர். இம்மாதிரியான வேலைகளும் அரவாணிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலைகளாகி விட்டன. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை / மாற்று வேலைகளைச் செய்வதற்கான சூழல் உருவாக்கப்படும்போதுதான் அவர்களை மனிதர்களாக ஏற்றுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த முடியும். அரவாணிகளுக்குச் சொத்துரிமை வழங்குதலும், கல்வி வேலை வாய்ப்புகளுக்கான இடஒதுக்கீடு வழங்குவதும் கூட அவர்களுக்கான அங்கீகாரமாக அமையும். அரவாணிகள் தனித்த பிறவிகள் அல்ல; மனிதப் பிறவிகள்தான் என்பதை உரத்துச் சொல்லும் காலம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்குத்தான் மனிதர்களைச் சமூகம் புரிந்து கொண்டதாகக் கருத முடியும். பெண்ணும் ஆணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கின்றதோ, அதைப் போலவே அலிகள் என்றழைக்கப்படும் அரவாணிகளையும் இயற்கைதான் படைத்திருக்கிறது என்பதில் உண்மை இருக்கின்றது. பெண்ணும் ஆணும் கடவுளின் படைப்பு என்று நம்பிக்கை சார்ந்த ஆன்மீகத் தளத்தில் நின்று பார்த்தாலும் கூட, அரவாணிகளும் கடவுளின் படைப்புதான் என்பதில் நம்பிக்கை கொண்டாக வேண்டும். ஆக, பெண் என்பது ஒரு பாலினம்; ஆண் என்பது இன்னொரு பாலினம், அரவாணி என்பது மூன்றாம் பாலினம் எனக் கொள்ளலாம். ஆனால், சமூகத்தில் நிலவுகிற எல்லாச் சட்டகங்களுமே (Frams) மூன்றாம் பாலினத்தை அங்கீகரிப்பதில்லை. சமூகத்தின் பொதுத் தளங்கள் யாவும் அரவாணிகளை அருவருப்பான மனநிலை சார்ந்த மக்கள் பிரிவாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைய வெகுமக்கள் ஊடகங்கள் யாவும் அரவாணிகளைக் கேவலமாகத்தான் காட்டி வருகின்றன. இத்தகைய ஊடகங்களால் உருவாக்கப்படும் கருத்தியலின் விளைவுகளால் சமூகமே இவர்களை இழிவான பிறவிகளாகப் பார்த்து வருகின்றது. அரவாணிகள் குறித்து அறிந்து கொள்ள நிறைய இருக்கின்றன. அரவாணிகள் பற்றிய தரவுகளை அவர்களே முன்மொழிகிற போதுதான் அது முழுமை கொள்ள முடியும். அவர்களிடம் கேட்டுப்பெறுகிற அல்லது பழகிப் பகிர்ந்து கொள்கிற செய்திகள் முழுமையான தரவுகளாக அமைந்திடாது. ஆயினும், அரவாணிகளைக் குறித்த முதல்நிலைப் புரிதலுக்காக சில அரவாணித் தோழர்களிடம் பெற்றுக் கொண்ட வாய்மொழித் தரவுகளை வைத்துக் கொண்டு சில புள்ளிகளைத் தொட்டுக் காட்ட முயற்சிக்கிறது இக்கட்டுரை.அரவாணிகள் உலகம் என்பது இங்குள்ள பெண் மற்றும் ஆண் உலகத்திலிருந்து தனித்து அமைந்திருக்கிறது. அரவாணிகளாகச் சேர்ந்து கொள்கிற அவர்கள் ஒரு தனிச் சமூகக் குழுவாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். ‘அரவாணிகள் கம்யூனிட்டி’ என்ற அடிப்படையில் ‘ஜமாத்’ என்று வழங்கப்படுகிறது.ஆணின் உடல்-உணர்வுகள் பெண்ணின் உடல்-உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருப்பதைப் போலவே அரவாணிகளும் பெண்/ஆண் உடல் - உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருக்கிறார்கள்.எல்லோராலும் நினைக்கிற மாதிரி ஓர் ஆணோ அல்லது பெண்ணோ ஒரு குறிப்பிட்ட நாளில் திடீரென்று ஞானம் வந்து அரவாணியாக மாறிவிடுவதில்லை. (பெரும்பாலான அரவாணிகள் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்கள் என்பதாலும், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுதல் என்பது மிகக் குறைவு என்பதாலும் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய அரவாணிகளின் மாற்றங்கள் குறித்துப் பேசப்படுகின்றன.) ஆணாகப் பிறந்த அரவாணிகள் குழந்தைப் பருவத்திலேயே பெண் சார்ந்த அடையாளங்களையே விரும்புகின்றனர். பெண்களின் விளையாட்டுக்கள் எனச் சொல்லப் படுகிறவற்றின் மீதே ஈர்ப்பு கொள்கின்றனர். திரைப்படங்களில் வருகிற கதாநாயகி போல ஆடுவதும், வீட்டில் உள்ள பெண்களில் உடைகளான பாவாடை, தாவணி உடுத்திக் கொண்டு வீட்டுக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் அழகு பார்த்துக் கொள்வதிலும், துண்டை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டு சடை மாதிரி முடியை முடிந்து போட்டுக் கொள்வதைப் போல துண்டை எடுத்துக் கட்டிக் கொள்வதும் கண்களுக்கு மைதீட்டிக் கொள்வதும், வளையல் மாட்டிக் கொள்வதுமாகச் சின்ன வயதிலேயே இவற்றின் மீதெல்லாம் ஈர்ப்பு கொள்கிறார்கள். இம்மாதிரியான செய்கைகளின் போது வீட்டில் உள்ளவர்களோ பக்கத்து வீட்டாரோ உறவினர்களோ கண்டிக்கிறபோது அவர்களுக்குத் தெரியாமல் செய்து கொள்வதில் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். பொதுவாகவே இவர்களுக்கு குழந்தைப் பருவ காலத்தில் பசங்களோடு சேருதல் என்பது பிடிக்காது, குழந்தைப் பருவத்தைத் தாண்டத் தாண்ட பெண்போல இருக்க விரும்புதல் அதிகமாகிப் போகிறது என்கிறார்கள். பெண்போல ஆடுவதும், உடை உடுத்திக் கொள்வதும், பேசுவதும் மற்றவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றினாலும், பெண்மையை உணர்கிற மாதிரியும் - தான் பெண் என்பதை யாருக்கோ உணர்த்துகிற மாதிரியும் எதிர்த்தாற் போல இருக்கும் மனம் உணர்த்திக் கொண்டே இருக்குமாம். அந்தப் பருவத்தில் இதுபோன்று இருப்பது வெட்கத்துக் குரிய விசயம் என்று நல்ல பிரஞ்ஞை இருந்ததினால் வெளியில் இதைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை.பெண்கள் பூப்படைகிற அல்லது ஆண்களுக்கு மீசை முளைக்கிற பருவத்தில் - பருவத்தில்தான் மிகப்பெரிய சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. பைத்தியம் பிடிப்பது மாதிரி உணர்வதும், வாழ்வதே சரியில்லை எனப் புலம்பிக் கொள்வதும், என்னமோ ஆகப்போகிறது என்ற பயமும் அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும். பெரும்பாலான அரவாணிகள் அந்தப் பருவத்தில் பைத்தியம் ஆகியிருக்க வேண்டும் அல்லது தற்கொலை செய்திருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். அந்தப் பருவத்தில் தங்களுக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களை உணரத் தொடங்கி விடுகிறார்கள். இதைவிட முக்கியமானது ஒவ்வொரு அரவாணியும் தனக்கு முன்பாக - முன்மாதிரியாக இருக்கும் அரவாணியைப் பார்த்த பிறகுதான், அதாவது அரவாணியும் வெளியே வந்து நடமாட முடியும்; உயிர்வாழ முடியும்; பெண்ணாகவும் ஆகிக் கொள்ள முடியும்; புடவை கட்டிக் கொள்ள முடியும் என்கிற அறிவும் முழுமையான பிரஞ்ஞையும் எற்பட்ட பிறகுதான் தன்னையும் ஓர் அரவாணியாக உணரத் தொடங்குகிறார்கள். அரவாணிகளைப் பார்க்கும்போது தொடக்கத்தில் பயமும் வியப்பும் வியப்பும் ஏற்பட்டு நாளாக நாளாக அவர்களோடு பழகும் வாய்ப்புகள் கிடைத்தபிறகு - அவர்களிடம் நிறையப் பேசப் பேச சில விசயங்களை உணர்வதாகச் சொல்கிறார்கள். வெளியில் வந்துவிட்ட அரவாணிகளோடு நெருக்கத்தையும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வது தேவையெனக் கருதுகிறார்கள். இத்தகைய சூழல் அதிகமாக வாய்க்கிறபோது, ஒருவிதமான வெறி தொற்றிக் கொள்வதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தான் ‘ஆம்பிளை’/ ‘ஆண்” என்கிற அடையாளத்தோடு வாழவே முடியாது என்ற நிலை வந்துவிடுகிற போதுதான் அரவாணியாக உணரக் கூடியவர்கள் தங்கள் ‘இருப்பு’ குறித்த சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. தங்களின் அடையாளத்தை எப்படித் தொடர்வது என்று தவிப்பதாக ஆகிவிடுகிறது.சுருக்கமாகச் சொல்வதெனில், இந்தப் பருவத்தில் அவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. உடலால் ஆணாகவும் உள்ளத்தால் பெண்ணாகவும் ஆகிக் கொள்கிறார்கள். இப்படியாகத் தனக்குள்ளே நிகழக்கூடிய மாற்றங்களைத் தெளிவாக உணர்ந்த பிறகு ஆண் தன்மையிலிருந்து விடுபடவே அவர்கள் விரும்புகின்றனர். தான் அரவாணி என்பதைத் தெரிந்து கொண்ட ஒருவர் தன்னை அரவாணி என்று பகிரங்கப்படுத்திச் சொல்லிக் கொள்ள முன் வருவதில்லை. அப்படியே முன்வந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை.படித்தவர் - நல்ல வசதியான குடும்பப் பின்னணி சார்ந்தவர் உயர்த்திக் கொண்ட சாதியில் பிறந்து தன்னை அரவாணியாக உணர்ந்து கொண்டிருக்கும் எல்லோருமே தான் அரவாணி என்பதைச் சொல்லிக் கொள்ள முன்வருதில்லை. தான் அரவாணி என்பது பிறருக்குத் தெரிந்து விட்டால் குடும்பத்துக்கும் சாதிக்கும் கவுரவக் குறைச்சலாக இருக்கும் என்பதால் மிகச் சிறுபான்மை அளவில்தான் அரவாணியாக வெளியே வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து அரவாணியாக உணரக் கூடியவர்களில் பெரும்பாலோர் வெளியே வந்து விடுகிறார்கள். இந்நிலையில் பெண்போல இருக்க விரும்பும் ஆணின் செயல்கள்யாவும் பெண்ணாக உணர்வதாக அமைகிற போதும், ஆண் உடலுக்குள் பெண்ணாகச் சிறைபட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறபோதும் ஒரு முடிவெடுக்கும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வீட்டிற்கு தான் அரவாணி என்பதைச் சொல்வதற்குப் பயந்து போனவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார்கள். சில சமயங்கள் அரவாணியாக உணர்ந்தவர்களை வீட்டார்களே அடித்து உதைத்து வீட்டை விட்டே துரத்தி விடுகிறார்கள். ஆக அரவாணியாக மாறிப்போனவர்களைக் குடும்பமும் கை கழுவி விடுகிறது.ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அக்குடும்பத்தாரோடு வாழ முடியாமல் போகிற அவலங்கள் எல்லா அரவாணிகளுக்குமே நேர்ந்து வருகிற கொடுமைகள். வெளி உலகத்திற்கு ஆணாகவும் - தன்னளவில் பெண்ணாகவும் இருப்பது என்பது இரட்டை வேடம் போடுதல் என்பதை உள்ளுக்குள் உணர்ந்தவர்கள் அரவாணியாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் களோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். உடல் தோற்றத்தாலும் பெண்ணாக மாற விரும்புகிறவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். பெண்ணாக உணரக்கூடிய பெரும்பாலான அரவாணிகள் ஆண் அடையாளத்தை விரும்புவதே கிடையாது. அறுவை சிகிச்சை செய்தோ அல்லது சில சடங்கு முறைகளின் மூலமோ ஆணுறுப்பை வெட்டி எறிகிறார்கள். இதன் மூலம் தனக்குள் இருக்கும் ஆண் தன்மை அழிந்து போனதாக உணர்கிறார்கள்.தன் குடும்பத்தில் பிறந்த ஒருவர் - தனக்குத் தெரிந்த ஒருவர் அரவாணியாக மாறிடக் கூடாது என்று கருதுகிறார்கள். இது அவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளால் ஏற்படக்கூடியது என்று நடுநிலைத் தன்மையோடு பார்க்க முடியாமல் கலாச்சார அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஓர் அரவாணி இருந்து கொண்டிருப்பது குடும்பத்திற்கு அவமானமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்கள் அரவாணிப் பிள்ளைகளை அங்கீகரிப்பதில்லை.குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழல் அரவாணிகளுக்கு ஏற்படுவதால், ஜமாத் என்றழைக்கப்படும் பெரும் குழு வட்டத்தோடு தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழு வாழ்க்கைக்குள் உறவு முறைகளை வகுத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழு வகுத்திருக்கும் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஒவ்வொரு அரவாணியும் இருக்க வேண்டும் என்கிறார்கள். அந்தக் கட்டுப்பாடுகளை மீறுகிற அரவாணிகளுக்குத் தண்டனை நிரம்ப உண்டு. பெரும்பாலான குழுக்கள் அரவாணிகளை ஒரு முதலீடாகவே பயன்படுத்தி வருகின்றன. தங்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து கொஞ்சமாவது இளைப்பாறிக் கொள்வதற்கும், தங்களை ஏதாவது ஒரு வகையில் உயிர்ப்பித்துக் கொள்வதற்கும், பிச்சை எடுத்தல் - பாலியல் தொழில் போன்றவைகளை அரவாணிகள் மேற்கொள்கின்றனர். பாலியல் தொழில் என்பது இவர்களின் விருப்பம் சார்ந்த தொழில் என்பதை விடவும், அவர்களுக்கு அம்மாதிரியான தொழில் மட்டும்தான் செய்ய முடியும் என்கிற நிலைமைகiள் இருக்கின்றபோது சமூகத்தின் பொதுப்புத்தி என்பது அரவாணிகளை பாலியல் தொழில் செய்வதற்கென்றே பிறந்தவர்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்பார்வையானது, அறியாமையில் வருவதல்ல; ஏற்கெனவே நிலவுகிற கருத்தியல் மதிப்பீடுகளின் தொடர்ச்சியாக வருவது. இம்மாதிரியான மதிப்பீடுகள் தோன்றுவதற்கு அரவாணிகள் நடத்தை முறைகள் காரணமாகச் சொல்லப் படுகின்றன பொது இடங்களில் உலாவுகிற அரவாணிகள் பெண்போல பாவித்துக் கொண்டு - தன்னிடம் இல்லாத பெண் நளினத்தை வலிந்து வருவித்துக் கொள்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன.ஒருவர் தன்னை பெண் என்று சொல்கிறாரோ இல்லையோ - ஆனால், தன்னை ஆண் என்று சொல்லிவிடக் கூடாது என உள்ளுக்குள் நினைத்துக் கொள்கிறார்கள். தன்னை ஒரு ‘ஒம்போது’ என்று சொல்வதை கூட சோகத்திலும் சந்தோசமாய் எடுத்துக் கொள்கிறார்கள். தான் பெண் இல்லைதான்; ஆனாலும் ஆண் என்று பிறர் சொல்லவில்லையே எனச் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். பெண் தன்மைக்கான அங்கீகாரமாக அதை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இந்த மாதிரி நடந்து கொள்வதால்; ஆண்கள் தங்களின் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஊடகமாகப் பார்க்கிறார்கள். இம்மாதிரி அணுகுவதை அரவாணிகளும் விரும்புகிறார்கள். ஏனெனில் ஒருவன் தன் கையைப் பிடிக்கிறான்; மார்பகங்களைப் பார்க்கிறான்; தன்னோடு உறவு கொள்ள விரும்புகிறான் எனில் தன்னிடம் பெண் தன்மை இருப்பதினால்தானே அவ்வாறு நடந்து கொள்கிறான் என்று உள்ளுக்குள் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். ஆக, அரவாணிகளின் இம்மாதிரியான செயல் பாடுகளை ஆண் தன்மையினைத் தூக்கி எறிவதற்கான முயற்சிகளாகக் கருத முடிகிறது.மனிதப் பிறவியாகவே பிறந்த அரவாணிகளைக் கேவலமான பண்பாட்டுக் குரியவர்கள் எனச் சொல்வதற்குப் பின்னால் இந்தியச் சூழலில் இந்து மதம் சார்ந்த ஆண் ஆதிக்கம் பேசுகிற தொன்மங்கள் வினையாற்றுகின்றன. இந்து மதம் சிலவற்றைப் புனிதமெனவும் அப்புனிதத்திற்கு மாறாக இருக்கக்கூடிய / விலகி நிற்கக் கூடிய / எதிராக இருக்கக் கூடிய யாவும் தீட்டு என இழிவு படுத்தி வைத்திருக்கிறது. இந்து மதம் சார்ந்த கருத்தியல்கள் சமூகத்தின் பொதுக் கருத்தியல்களாகப் பரப்பப்பட்டிருக் கின்றன. இந்து மதம் சார்ந்த கருத்தியல்கள் ஒன்றுதான் ‘லிங்க மய்ய வாதம்’. தந்தை வழிச் சமூகத்தின் எச்சங்களை இக்கருத்தியல்கள் தாங்கி நிற்பதைப் பார்க்கலாம். ஆண் மேலானவன்; உயர்வானவன்; வலிமையானவன்; ஆளக் கூடியவன்; புனிதமானவன் என்பதாக லிங்க மய்ய வாதம் ஆண் தலைமையை முன்வைக்கும். அதே போல பெண்ணின் யோனி வழிப் புணர்ச்சிதான் இயற்கையானது; அதுதான் புனிதமானது என்ற கருத்தியலும் சமூகத்தில் மேலோங்கி நிற்கிறது. இக்கருத்தியல்கள் அரவாணிகளை எப்படிப் பார்க்கிறது? அரவாணிகள் ஆண்குறியோடு பிறந்திருந்தாலும் ஆண்குறி தனக்கு இருப்பதை விரும்பாதவர்கள். ஏதாவது ஒரு வகையில் ஆண் குறியை அறுத்து எறிந்து புதைத்து விடுகிறார்கள். இதுவே லிங்க மய்ய வாதத்தைத் தகர்க்கும் தன்மை கொண்டது. லிங்க மய்ய வாதத்திற்கு நேர் எதிரான கலகத்தன்மை கொண்டது. இன்னொன்று அரவாணிகளுடனான பாலியல் புணர்ச்சி என்பது யோனி வழிபட்டதல்ல. ஆக, லிங்க மய்ய வாதத்திற்குள் பெண் கீழாக வைக்கப்படுகிறாள். லிங்க மய்ய வாதத்திற்குள் வராத / எதிராக இருக்கும் அரவாணிகள் இழிவானவர்களாகக் கருத்தாக்கம் செய்கிறது. அவ்வாதம், இதன் நீட்சியாகத்தான் அரவாணிகளைக் கேவலமாகப் பார்ப்பதும், அங்கீகரிக்காமல் இருப்பதுமான நிகழ்வுகள் அமைகின்றன.அரவாணிகளுக்கான இடம் மறுக்கப்பட்டே வருகின்றன. பெரும்பாலான அரவாணிகள் கல்வியைத் தொடர முடியாமலே போகின்றனர். வேலை தேடிச் செல்கிறபோது அவ்வேலைக்கு லாயக்கற்றவர்கள் என ஒதுக்கப் படுகின்றனர். சான்றிதழ்களில் பாலினம் எனக் குறிக்கப்பெறும் இடத்தினில் பெண் என்றோ ஆண் என்றோ பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அரவாணி எனும் மூன்றாம் பாலினத்தைப் பதிவு செய்து கொள்வதற்கான அனுமதியும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை. இந்நாட்டில் பிறந்த குடிமக்கள் என்ற நிலையில் கூட அரவாணிகள் நடத்தப்படுவதில்லை. குடும்ப அட்டைகள் வாக்காளர் பதிவுகள் வங்கிக் கணக்குகள் போன்றவற்றில் அரவாணிகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டே வருகின்றன. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்ற மருத்துவச் சான்றிதழ் கொடுத்தல் மிகவும் அரிதாக இருக்கிறது. ஆகவே அரவாணிகளுக்குச் சட்ட அங்கீகாரம் மிக முக்கியமானதாகப் படுகிறது.இங்கே பெண்களுமே அரவாணிகளைக் கேவலமாகத்தான் பார்க்கிறார்கள். சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் பாதுகாப்பும் பகிர்தலும் குறைந்தளவேனும் கிடைக்கப் பெறும். ஆனால், அரவாணிகளுக்கு அத்தகைய வாய்ப்புகள் அமைவதில்லை. ஏனெனில், திருமணம் என்கிற ஒன்று இவர்களுக்கு அமைவதில்லை. பெரும்பாலான ஆண்கள் பாலியல் ஊடகமாகத்தான் அரவாணிகளைப் பார்க்கிறார்களே தவிர, அரவாணியை மனைவியாக / துணைவியாக / வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் பங்காளராக ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவேளை, அரவாணிகள் திருமண உறவை விரும்பினால் கூட அவர்களை மணந்து கொள்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அதற்குக் காரணம், அரவாணிகளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. சராசரிப் பெண்ணைப் போல தாய்மைப் பேறு அடைய முடியாது. ஏனெனில் அரவாணிகளுக்குக் கர்ப்பப்பையே கிடையாது. இந்தக் கர்ப்பப்பை தான் பெண்ணை அடிமைச் சிறையில் வைத்திருக்க உதவுகிறது. அரவாணிகளோ கர்ப்பப்பை இல்லாமல் இருந்தும் கூட அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. மனித இன மறுஉற்பத்தியை அரவாணிகள் செய்ய முடியாது என்பதனாலே அவர்கள் ஒதுக்கலுக்கு உள்ளாகிறார்கள் என்பது குறிப்படத்தக்கது. பெண்கள் தங்களின் அடிமைச் சிறையிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் கர்ப்பப் பைகளை அறுத்தெறியுங்கள் என்றார் பெரியார். இதைச் சமூகம் ஓரளவேணும் உணரத் தொடங்கினாலும் கூட, கர்ப்பப்பைகளே இல்லாத அரவாணிகளைப் பற்றிப் புரிந்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறது. அதற்குக் காரணம், அவர்களின் பிறப்பே கலகமாக அமைந்திருப்பதுதான். ஒரு பெண் ஆணுக்குரிய சுதந்திரத்தோடு வளர்ந்தால் எப்படி இருப்பாளோ அப்படித்தான் அரவாணிகளும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணை பெண்ணாக வளர்க்காமல் ஆணுக்குரிய சுதந்திரத்தோடு வளர்த்தால் தன்னுடைய இருபது வயதில் எப்படி இருப்பாளோ அப்படித்தான் அரவாணிகளும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரவாணிகளின் அடிப்படையையே புரிந்து கொள்ள மறுக்கிறது சமூகம், அரவாணிகளுக்கு உழைப்பே மறுக்கப்படுகிறது; இருத்தலே கேள்விக்குள்ளாகிறது; பெற்றோர்களே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.அரவாணிகளைக் குறித்து தவறான கற்பிதங்களைச் சமூகம் உருவாக்கி வைத்திருந்தாலும், அதை மாற்றிட சமூக மாற்றத்திற்கான இயக்கங்களும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அரவாணிகளும் மனிதர்களே என்ற பார்வை மாற்று அமைப்புகள் / இயக்கங்கள் போன்றவற்றில் வந்திருந்தாலும் அரவாணிகள் குறித்த செயல்பாடுகளைப் பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களே கையாண்டு வருகின்றன. இத்தொண்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கணக்கு காட்டுவதைத்தான் மேற்கொள்கின்றன என்ற விமர்சனங்கள் பரவலாக உண்டு. அரவாணிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் எய்ட்சு தொடர்பான விழிப்புணர்வு இயக்கங்களையும் - ஆணுறை விநியோகம் தொடர்பான காரியங்களையும் செய்து வருகின்றன. இவ்வேலைகளில் அரவாணிகளே பெரும்பாலும் ஈடுபடுத்தப் படுகின்றனர். இம்மாதிரியான வேலைகளும் அரவாணிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலைகளாகி விட்டன. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை / மாற்று வேலைகளைச் செய்வதற்கான சூழல் உருவாக்கப்படும்போதுதான் அவர்களை மனிதர்களாக ஏற்றுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த முடியும். அரவாணிகளுக்குச் சொத்துரிமை வழங்குதலும், கல்வி வேலை வாய்ப்புகளுக்கான இடஒதுக்கீடு வழங்குவதும் கூட அவர்களுக்கான அங்கீகாரமாக அமையும். அரவாணிகள் தனித்த பிறவிகள் அல்ல; மனிதப் பிறவிகள்தான் என்பதை உரத்துச் சொல்லும் காலம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்குத்தான் மனிதர்களைச் சமூகம் புரிந்து கொண்டதாகக் கருத முடியும்.


ஏர்மகராஜன்

thanks to puthiya kattrU

Footer